தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் சிவகார்த்திகேயன். முதலில் டிவியில் வாழ்க்கையை தொடங்கிய சிவகார்த்திகேயன் இப்போது தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத ஹீரோவாக உயர்ந்து உள்ளார்.அவரது ஒவ்வொரு படத்தையும் ரசிகர்கள் எதிர்பார்த்து உள்ளனர்.
3-வது முறையாக கர்ப்பம்
நடிகர் சிவகார்த்தியேன் சினிமாவுக்கு வருவதற்கு முன்பே கடந்த 2010 ம் ஆண்டு தனது முறைப்பெண்ணான ஆர்த்தியை திருமணம் செய்து இருந்தார். அவர்களுக்கு ஆராதனா, குகன்தாஸ் என்ற 2 குழந்தைகள் உள்ளனர்.
இதற்கிடையே ஆர்த்தி 3-வது முறையாக கர்ப்பம் அடைந்து இருந்தார். இந்த நிலையில் அவருக்கு நேற்று(2ந்தேதி) 3-வதாக ஆண்குழந்தை பிறந்து உள்ளது. இதனை நடிகர் சிவகார்த்திகேயன் மகிழ்ச்சியுடன் அறிவித்து உள்ளார்.
ஆண்குழந்தை
இதுகுறித்து நடிகர் சிவகார்த்திகேயன் தனது எக்ஸ் சமூகவலை தள பக்ககத்தில் பதிவிட்டுள்ளதாவது:-
“எங்களுக்கு நேற்று (ஜூன் 2) ஆண் குழந்தை பிறந்திருக்கிறான் என்ற செய்தியை பெருமகிழ்வோடு பகிர்ந்து கொள்கிறோம். ஆர்த்தியும் குழந்தையும் நலம். ஆராதனாவிற்கும் குகனிற்கும் நீங்கள் தந்த அன்பையும் ஆசியையும் எங்கள் மூன்றாவது குழந்தைக்கும் தர வேண்டும் என்று வேண்டுகிறோம். நன்றி.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
இதையும் படியுங்கள்: பெற்றோரை சந்தித்த நடிகர் விஜய்