சென்னையில் நடைபெற்ற Fanly பொழுதுபோக்கு செயலியின் விழாவில் கலந்துகொண்ட நடிகர் சிவகார்த்திகேயன் அனைவரையும் கவரும் வகையில் தனக்கும் தனது ரசிகர்களுக்குமான உறவு பற்றியும் சமூக வலைத்தளங்கள் பற்றியும் பேசியுள்ளார்.
Sivakarthikeyan பேச்சு!
“இந்த மேடையில் இருப்பவர்களை ஒப்பிடும்போது எனக்குத்தான் கொஞ்சம் மூளை கம்மி என நினைக்கிறேன். அதனால்தான் நடிக்க முடிகிறது. மூளை ரொம்ப ஜாஸ்தியா இருந்தா நான் இயக்குநர்களையெல்லாம் டார்ச்சர் பண்ண ஆரம்பிச்சிருவேன்னு நினைக்கிறேன். அதனால அவங்க சொல்றத கேட்டு நடிக்கிற ஆளா இருக்கறதுக்கு கொஞ்சம் கம்மியா இருக்கிறதே நல்லதுதான்.
நான் எப்பவுமே என்னுடைய ஃபேன்ஸ என் பிரதர்ஸ் அண்ட் சிஸ்டர்ஸ்னு சொல்லுவேன். ஏன்னா அவங்கள ஒரு ஃபேமிலியா பார்க்கிறேன்… என் ஃபேன்ஸ் டிஸ்ட்ராக்ட் ஆகிடக் கூடாது, வேற எதோ அவங்க மைண்டுக்குள்ள திணிச்சிடக் கூடாதுங்கிறத நான் மைண்ட்ல எப்பவும் வச்சிருப்பேன்.