சீக்ரெட் வியூகம் அமைத்த அதிகாரி – செயலாக்கிய டீம்! | How dmk government executed this 5000 women’s scheme secretly

Spread the love

இந்நிலையில் தான் முதல்வரிடம் ஆளுநர் உரைக்கு மீதான நன்றி தெரிவிக்கும் தீர்மானம் முடிந்தவுடன் நிதித்துறை அதிகாரியுடன் ஆலோசனை நடத்தியுள்ளார். அப்போது, `5000 ரூபாய் ஒரே கட்டமாக வழங்கிவிடலாம். 1 கோடியே 30 லட்சம் பயனாளிகளுக்கு ஒரே நாளில் இத் தொகையை செலுத்த அரசுக்கு 6,500 கோடி ரூபாய் வேண்டும்’ என்கிற விவரங்களை கூறியிருக்கிறார். இந்த பணத்தை எந்த துறையிலிருந்து சரிக்கட்ட முடியும் என்கிற ஆலோசனையும் அதன்பிறகு நடந்துள்ளது. இதற்கு முதல்வர் ஒப்புதல் கிடைத்தவுடன், உடனடியாக களத்தில் இறங்கினார் அதிகாரி.

தனக்கு நம்பகமாக நிதித்துறையின் டீமை மட்டும் வைத்து இது குறித்த திட்ட அறிக்கை தயார் செய்து, கடந்த வாரம் முதல்வரிடம் ஒப்புதல் பெற்று விட்டனர். வெள்ளிக்கிழமை அன்று வங்கி கணக்கில் போட்டால், உடனடியாக யாரும் நீதிமன்றத்திற்கு செல்ல முடியாது என முதல்வரிடம் ஆலோசனை சொல்லியுள்ளார்கள்.

மற்றொருபுறம் இத்திட்டம் அறிவிப்பதற்கு இரண்டு நாட்களுக்கு முன்பாகவே இந்த திட்டம் குறித்த வீடியோ சூட்டை பென் நிறுவனம் நடத்தி முடித்துவிட்டது. ஆனால் எந்த பக்கமும் தகவல் கசியாமல் இதனை செய்து முடித்து எதிர்க்கட்சி தரப்புகளுக்கு அதிர்ச்சி வைத்தியம் அளித்துது திமுக தரப்பு.

இது தேர்தலில் கை கொடுக்குமா என்பது தேர்தல் முடிவில் தெரிந்து விடும்.!

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *