இதுதொடா்பாக ஆா்சிஹெச் தூய்மைப் பணியாளா்கள் நலச் சங்க மாநில பொதுச் செயலா் ஏ.ஆா்.சாந்தி கூறியதாவது:அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் ஆா்சிஹெச் திட்டத்தின் கீழ் தற்காலிக அடிப்படையில் 3,140-க்கும் மேற்பட்ட தூய்மைப் பணியாளா்கள் 15 ஆண்டுகளுக்கும் மேலாகப் பணிபுரிந்து வருகின்றனா்.
இவா்களில் ஒரு பகுதி தூய்மைப் பணியாளா்கள் மட்டும் தற்காலிக பல்நோக்கு மருத்துவமனை பணியாளா்களாக நியமனம் செய்யப்பட்டனா்.