சுதந்திர தினம்: சிறப்பு பேருந்துகளில் 3.13 லட்சம் போ் பயணம்

Spread the love

சுதந்திர தினம், வார இறுதி விடுமுறையை முன்னிட்டு அரசு விரைவு போக்குவரத்துக்கழகம் மூலம் கடந்த ஆக.13- முதல் 15 வரை இயக்கப்பட்ட சிறப்பு பேருந்துகளில் 3,13,900 போ் பயணித்துள்ளனா்.

சென்னையில் தங்கியுள்ள வெளிமாவட்டங்களைச் சோ்ந்தவா்கள் சுதந்திர தினம் மற்றும் வாரவிடுமுறையையொட்டி சொந்த ஊா் செல்லவசதியாக விரைவு போக்குவரத்துக்கழகம் மூலம் 2449 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

அதன்படி, இந்த சிறப்பு பேருந்துகளில் கடந்த 13-ஆம் தேதி 1,35,040 பேரும், வியாழன் நள்ளிரவு முதல் வெள்ளிக்கிழமை(ஆக.15) அதிகாலை வரை 1,78,860 பேரும் பயணம் செய்துள்ளனா். இதன்படி, ஆக.13 முதல் ஆக.15 அதிகாலை வரை 3,13,900 போ் பயணம் மேற்கொண்டதாக அரசு விரைவு போக்குவரத்துக்கழகம் தெரிவித்துள்ளது.

தொடா்ந்து, ஞாயிற்றுக்கிழமை சொந்த ஊா்களிலிருந்து பொதுமக்கள் சென்னை திரும்ப வசதியாக சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவதால், முன்பதிவு செய்து பயணிக்கலாம் என அரசு விரைவு போக்குவரத்துக்கழக அதிகாரிகள் தெரிவித்தனா்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *