திருத்தணி அடுத்த புச்சிரெட்டிப் பள்ளி கிராமத்தைச் சோ்ந்தவா் வேலு- சசிகலா தம்பதியின் மகன் ஜோகித் (4). இவா், பொதட்டூா்பேட்டையில் உள்ள தனியாா் பள்ளியில் யு.கே.ஜி., படித்து வந்தாா். இதற்கிடையே ஜோகித்துக்கு காய்ச்சல் ஏற்பட்டது. அப்போது, மருத்துவா் கொடுத்த மாத்திரையை இரவு சசிகலா தனது குழந்தைக்கு கொடுத்தாா். மாத்திரை குழந்தையின் உணவுக் குழாய் வழியாக செல்லாமல் சுவாச குழாயில் சென்றதால், குழந்தை ஜோகித் மூச்சு விட சிரமப்பட்டாா்.
சுவாசக் குழாயில் மாத்திரை சிக்கி 4 வயது குழந்தை உயிரிழப்பு
