சுவைக்கத் தூண்டும் சாட் : `சேவ் பூரி' – வீட்டிலேயே எளிதாக செய்வது எப்படி?

Spread the love

சேவ் பூரி

தேவையானவை:

  • பாப்டி எனப்படும் மைதா தட்டைகள் அல்லது சாட் தட்டை – 18 (இவை பெரிய கடைகளில் கிடைக்கும்)

  • உருளைக்கிழங்கு – ஒன்று (தோல் உரித்து, வேகவைத்து சிறிய சதுரமாக நறுக்கிக்கொள்ளவும்)

  • வெங்காயம் – ஒன்று (பொடியாக நறுக்கியது)

  • தக்காளி – இரண்டு (பொடியாக நறுக்கியது)

  • மாங்காய் – பாதி (பொடியாக நறுக்கியது, விருப்பப்பட்டால்)

  • பூண்டுச் சட்னி – 2 டீஸ்பூன்

  • இனிப்புச் சட்னி – 2 டீஸ்பூன்

  • பச்சைச் சட்னி – 4 டீஸ்பூன்

  • சாட் மசாலாத்தூள் – அரை டேபிள்ஸ்பூன்

  • வறுத்த சீரகத்தூள் – ஒரு டேபிள்ஸ்பூன்

  • மிளகாய்த்தூள் – அரை டேபிள்ஸ்பூன்

  • எலுமிச்சைச்சாறு – ஒரு டேபிள்ஸ்பூன்

  • ஓமப்பொடி (சேவ்) – அரை கப்

  • கொத்தமல்லி – சிறிதளவு (நறுக்கியது)

  • வறுத்த கடலைப்பருப்பு – 3 டேபிள்ஸ்பூன்

செய்முறை:

ஒரு தட்டில் ஆறு தட்டைகளை வரிசையாக வைத்து அதன் மேல் சிறிது உருளைக்கிழங்கு துண்டுகளை லேசாக மசித்தவாறு போடவும். பிறகு அதன்மேல் நறுக்கிய வெங்காயத்தைத் தூவவும். பின்னர் இதில் பூண்டுச் சட்னி, இனிப்புச் சட்னி, பச்சைச் சட்னி ஆகியவற்றை ஒன்றன் பின் ஒன்றாக ஊற்றவும். பிறகு சாட் மசாலா, வறுத்த சீரகத்தூள், மிளகாய்த்தூள், ஓமப்பொடி (சேவ்) மற்றும் கால் டீஸ்பூன் எலுமிச்சைச்சாறு ஆகியவற்றை பரவலாகச் சேர்க்கவும். இதன் மீது நறுக்கிய தக்காளி, மாங்காய், கொத்தமல்லி, வறுத்த கடலைப் பருப்பு தூவிப் பரிமாறவும். இதே போன்று மூன்று செட்டுகள் தயாரிக்கலாம்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *