சூர்யகுமார் யாதவ் அரைசதம்; பஞ்சாப் கிங்ஸுக்கு 185 ரன்கள் இலக்கு!

Spread the love

பஞ்சாப் கிங்ஸுக்கு எதிரான போட்டியில் முதலில் விளையாடிய மும்பை இந்தியன்ஸ் அணி 7 விக்கெட்டுகளை இழந்து 184 ரன்கள் எடுத்துள்ளது.

ஐபிஎல் தொடரில் ஜெய்பூரில் நடைபெற்று வரும் இன்றையப் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் விளையாடி வருகின்றன. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் அணி பந்துவீச்சைத் தேர்வு செய்ய, மும்பை இந்தியன்ஸ் அணி முதலில் விளையாடியது.

இதையும் படிக்க: 8-வது இடத்துடன் ஐபிஎல் தொடரை நிறைவு செய்த நடப்பு சாம்பியன்; பேட்ஸ்மேன்களை குறைகூறும் ரஹானே!

சூர்யகுமார் அரைசதம்; 185 ரன்கள் இலக்கு

முதலில் விளையாடிய மும்பை இந்தியன்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 184 ரன்கள் எடுத்துள்ளது. அந்த அணியில் அதிரடியாக விளையாடிய சூர்யகுமார் யாதவ் அதிகபட்சமாக 39 பந்துகளில் 57 ரன்கள் எடுத்து அசத்தினார். அதில் 6 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்கள் அடங்கும்.

அவரைத் தொடர்ந்து, ரியான் ரிக்கல்டான் 27 ரன்களும், கேப்டன் ஹார்திக் பாண்டியா 26 ரன்களும் எடுத்தனர். ரோஹித் சர்மா 24 ரன்களும், நமன் திர் 20 ரன்களும் எடுத்தனர்.

பஞ்சாப் கிங்ஸ் தரப்பில் அர்ஷ்தீப் சிங், மார்கோ யான்சென் மற்றும் விஜயகுமார் வைசாக் தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர். ஹர்பிரீத் பிரார் ஒரு விக்கெட்டினைக் கைப்பற்றினார்.

இதையும் படிக்க: சிஎஸ்கேவின் பேட்டிங் பயிற்சியாளராகும் ரெய்னா!

185 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி பஞ்சாப் கிங்ஸ் அணி களமிறங்குகிறது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *