இதுகுறித்து அதிமுக நிர்வாகிகள் சிலரிடம் பேசியபோது, அதிமுகவில் ஏற்கெனவே ஓரங்கட்டப்பட்டு அடையாளத்தை இழந்தவர்கள் தான் மாற்று கட்சிக்கு செல்கிறார்கள். செங்கோட்டையன் தாக்கம் கோபிசெட்டிப்பாளையம் தொகுதியில் மட்டும் தான் இருக்கும்.

சின்னசாமி எம்எல்ஏ, அண்ணா தொழிற்சங்க செயலாளர் பதவியில் இருந்தது எல்லாம் கடந்த காலம். சின்னசாமி ஆரம்பத்தில் கம்யூனிஸ்ட் கட்சியில் இருந்தார். பிறகு அதிமுகவில் இணைந்தார்.
ஜெயலலிதா மறைந்து அண்ணா தொழிற்சங்க பதவி போன பிறகு அவர் அமமுக, பாஜக கட்சிகளில் ஒரு ரவுண்டு அடித்துவிட்டார்.
அவர் மீதிருந்த ஒரு மோசடி வழக்கை வாபஸ் வாங்குவதற்காக மீண்டும் அதிமுகவில் இணைந்து சிறிது காலம் இருந்தார். தற்போது அந்த வழக்கு வாபஸ் பெறபட்டுவிட்டதால் சின்னசாமி திமுகவில் இணைந்துள்ளார்.
அவர் கடைசியாக எந்தக் கட்சியில் இருந்தார் என்று யாருக்குமே தெரியாதளவுக்கு தான் அவரின் செயல்பாடுகள் இருந்தன.
சின்னசாமி திமுக சென்றிருப்பதால் அதிமுகவுக்கு எந்த இழப்பும் இல்லை. செங்கோட்டையன் அதிருப்தியில் இருந்ததால் அவரை தங்கள் கட்சியில் இழுக்க திமுக முயற்சி செய்தனர். அது நடைபெறவில்லை என்பதால் திமுக சின்னசாமியை இணைத்து அவர்களின் தலைமையை சமாளித்துள்ளனர்.” என்றனர்.