அதிமுகவில் 50 ஆண்டுகளாக இருந்த மூத்த தலைவர் செங்கோட்டையன், கடந்த வியாழக்கிழமை (நவ. 27) அன்று பனையூரில் விஜய் முன்னிலையில் தவெகவில் இணைந்தார்.
அன்றைய செய்தியாளர் சந்திப்பில், “தமிழ்நாடு அரசியலில் மாற்றம் வேண்டும், தூய்மையான அரசியல் வேண்டும்” என்பதற்காக தவெகவில் இணைந்ததாகக் கூறியிருந்தார் செங்கோட்டையன்.
பாஜகவின் வழிகாட்டுதலில் தவெகவில் இணைந்தார் என திமுக கூட்டணி கட்சிகளும், திமுக வழிகாட்டுதலில் தவெகவில் இணைந்தார் என்று பாஜக கூட்டணியினரும் மாறி மாறி பேசி வருகின்றனர்.
செய்தியாளர் சந்திப்பில் இதைக் குறிப்பிட்டு பேசியிருந்த செங்கோட்டையன், “இது என் முடிவு. இதற்குப் பின்னால் யாருமில்லை. தவெகவில் இணைவதற்கு முன் சேகர் பாபுவையோ அல்லது பாஜகவைச் சார்ந்த வேறு யவரையும் நான் சந்திக்கவில்லை. என்னுடன் எந்தக் கட்சியினரும் பேச்சுவார்த்தை நடத்தவில்லை.
நான் யாருடனும் சந்தித்தது தொடர்பான புகைப்படம் அல்லது வேறு எதாவது ஆதாரங்கள் இருந்தால் காட்டுங்கள்” என்று கூறியிருந்தார்.