தென்காசி மாவட்டம், செங்கோட்டை நகர்மன்ற கூட்டம் நகர்மன்ற அலுவலகத்தில் உள்ள கூட்டரங்கில் தி.மு.க நகர்மன்ற தலைவி ராமலட்சுமி தலைமையில் நடந்தது.
இந்தக் கூட்டத்தில் மொத்தம் 51 தீர்மானங்கள் கொண்டு வரப்பட்டு, அவற்றின் மீது அதிமுக, தி.மு.க கவுன்சிலர்களிடையே காரசார விவாதமும் நடந்தது.
அப்போது அ.தி.மு.க, பா.ஜ.க கவுன்சிலர்கள் 44-வது தீர்மானத்தில் செங்கோட்டையில் உள்ள மின்மயான ஒப்பந்தத்தை குறிப்பிட்ட தொண்டு நிறுவனத்திற்கு வழங்கக்கூடாது என்றும், அதனை ரத்து செய்ய வேண்டும் என்றும் தெரிவித்தனர்.

அதற்கு தி.மு.க நகர்மன்ற தலைவி ராமலட்சுமி அதனை ஏற்காமல் அ.தி.மு.க, பா.ஜ.க கவுன்சிலர்களிடையே கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
பின்னர் அந்த தீர்மானத்தை ரத்து செய்யலாமா? என அ.தி.மு.க கவுன்சிலர்கள் கேட்டதற்கு அவர் சைகை மூலம் தலையசைத்தார்.