செங்கோட்டை ரயில் நேரம் 4 நாள்களுக்கு மாற்றம்!

Dinamani2f2024 08 252f10z4wv1d2ftrain.jpg
Spread the love

விருதுநகர் மாவட்டம், ராஜபாளையத்தில் ரயில்வே மேம்பாலம் கட்டும் பணி நடைபெறுகிறது. இதையொட்டி, ஆக. 26, 27 மற்றும் செப். 8, 9 ஆகிய தேதிகளில் ராஜபாளையம்- சங்கரன்கோவில் இடையேயான ரயில் போக்குவரத்து காலை 9.30 மணி முதல் பிற்பகல் 1.20 மணி வரை தடை செய்யப்படுகிறது.

இதனால், மேற்கண்ட 4 நாள்களிலும் செங்கோட்டை- மதுரை பயணிகள் விரைவு ரயில் (06664) செங்கோட்டையிலிருந்து பகல் 12.10 மணிக்கு புறப்படுவதற்கு பதிலாக 50 நிமிடம் தாமதமாக பகல் 1 மணிக்குப் புறப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *