கொந்தளித்த திமுகவினர்
அண்மையில் கோவை திமுக-வில் வார்டு, பகுதி, நகரம், ஒன்றியம் உள்ளிட்ட பகுதிகள் பிரிக்கப்பட்டன. அதில் பல்வேறு குளறுபடிகள் ஏற்பட்டுள்ளன. மாற்றுக்கட்சிகளில் இருந்து வந்தவர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டதாக புகார் எழுந்துள்ளது. எஸ்ஐஆர் பணி தொடர்பாக ஆய்வு செய்வதற்காக கோவை திமுக நிர்வாகியிடம் இந்த பிரச்னையை சொல்லி குமுறினார்கள்.

பணம் வாங்கிக் கொண்டு பதவி நியமிக்கப்படுவதாகவும் திமுகவினர் கொந்தளித்து வருகிறார்கள். இதுதொடர்பாக திமுக மாவட்ட செயலாளரிடம் நிர்வாகி ஒருவர் பேசிய ஆடியோவும் வெளியாகியிருந்தது.