செந்தில் பாலாஜி மீதான மோசடி வழக்குகள் முடிவுக்கு வரும் வரை சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கை விசாரிக்க தடை கோரி மனு | Petition seeking stay on investigation into senthil balaji illegal money transfer case

Spread the love

சென்னை: முன்​னாள் அமைச்​ச​ரான செந்​தில் பாலாஜி முந்​தைய அதி​முக ஆட்​சி​யில் போக்​கு​வரத்​துத் துறை அமைச்​ச​ராக பதவி வகித்​தார். அப்​போது அரசு போக்​கு​வரத்​துக்​கழகத்​தில் வேலை வாங்​கித்​தரு​வ​தாகக் கூறி பலரிட​மும் பணம் பெற்று மோசடி​யில் ஈடு​பட்​ட​தாக செந்​தில் பாலாஜி உள்​ளிட்​டோர் மீது சென்னை மத்​திய குற்​றப்​பிரிவு போலீ​ஸார் 3 மோசடி வழக்​கு​களைப் பதிவு செய்​தனர்.

இந்த வழக்​கு​கள் எம்​.பி. எம்​எல்​ஏ-க்​கள் மீதான வழக்​கு​களை விசா​ரிக்​கும் சிறப்பு நீதி​மன்​றத்​தில் நடந்து வரு​கிறது. இந்த பிர​தான வழக்​கு​களின் அடிப்​படை​யில் செந்​தில் பாலாஜி, அவரது சகோ​தரர் அசோக்​கு​மார் உள்​ளிட்​டோர் சட்​ட​விரோத பணப்​பரி​மாற்​றத்​தில் ஈடு​பட்​டுள்​ள​தாகக் கூறி அமலாக்​கத் துறை அதி​காரி​கள் தனி​யாக வழக்​குப்​ப​திவு செய்​துள்​ளனர்.

இந்த வழக்​கில் கைதான செந்​தில் பாலாஜி ஓராண்​டுக்​குப் பிறகு உச்ச நீதி​மன்ற உத்​தர​வுப்​படி ஜாமீனில் விடுவிக்​கப்​பட்​டார். இந்த வழக்கு விசா​ரணை சென்னை உயர் நீதி​மன்ற வளாகத்​தில் உள்ள முதன்மை அமர்வு நீதி​மன்​றத்​தில் நிலு​வை​யில் உள்​ளது.

நவ.24-க்கு தள்ளிவைப்பு இந்த வழக்​கில் குற்​றம்​சாட்​டப்​பட்ட முன்​னாள் அமைச்​சர் செந்​தில் பாலாஜி​யின் உதவி​யாள​ரான கார்த்​தி​கேயன் மற்​றும் கணேசன் ஆகியோர் எம்​.பி.எம்​எல்​ஏ-க்​கள் நீதி​மன்​றத்​தில் தங்​களுக்கு எதி​ராக நிலு​வை​யில் உள்ள மோசடி வழக்​கில் இறுதி முடிவு எட்​டப்படும் வரை அமலாக்​கத் துறை தொடர்ந்​துள்ள இந்த வழக்கை விசா​ரிக்​கக் கூடாது என தடை கோரி​யும், சாட்சி விசா​ரணையை தள்ளி வைக்​கக்​கோரி​யும் மனுத்​தாக்​கல் செய்​திருந்​தனர்.

இந்த மனுக்​கள் சென்னை முதன்மை அமர்வு நீதி​மன்​றத்​தில் நீதிபதி எஸ்​.​கார்த்​தி​கேயன் முன்​பாக நேற்று விசா​ரணைக்கு வந்​தது. அப்​போது, வழக்​கில் குற்​றம் சாட்​டப்​பட்ட முன்​னாள் அமைச்​ச​ரான செந்​தில் பாலாஜி, இதய அறுவை சிகிச்​சைக்​காக அமெரிக்கா​வுக்கு சென்று திரும்​பிய அவரது சகோ​தரர் அசோக்​கு​மார் உள்​ளிட்ட 11 பேர் ஆஜராகினர். அமலாக்​கத் துறை தரப்​பில் இந்த மனுக்​களுக்கு பதிலளிக்க அவகாசம் கோரப்​பட்​டது. அதையடுத்து நீதிப​தி, அமலாக்​கத் துறைக்கு அவகாசம்​ வழங்​கிவி​சா​ரணை​யை நவ.24-க்​குதள்​ளி வைத்​துள்​ளார்​.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *