இந்திய பங்குச்சந்தையில் வணிக நேர முடிவில், சென்செக்ஸ், நிஃப்டி இன்று (அக். 17) தொடர்ந்து மூன்றாவது நாளாக சரிவுடன் முடிந்தது.
நிஃப்டி சரிந்து மீண்டும் 24 ஆயிரம் புள்ளிகளுக்குக் கீழ் சரிந்தது. சென்செக்ஸ் ஒட்டுமொத்தமாக 700 புள்ளிகள் வரை சரிந்தது.
மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 494.75 புள்ளிகள் சரிந்து 81,006.61 புள்ளிகளாக நிலைப்பெற்றது. இது மொத்த வணிகத்தில் 0.61% சரிவாகும்.
தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி, 221.45 புள்ளிகள் குறைந்து 24,749.85 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவு பெற்றது. மொத்த வணிகத்தில் இது 0.89% சரிவாகும்.