சென்னையில் ஞாயிற்றுக்கிழமை(ஜன. 19) மாலை வரை மழை பெய்யுமென சுயாதீன வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.
சென்னையிலும் அதன் புறநகர்ப் பகுதிகளிலும் பரவலாக நேற்று மாலை முதல் பலத்த மழை பெய்து வரும் நிலையில், இன்றும் மழை நீடிக்குமென பிரதீப் ஜான் தனது சமூகவலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.