சென்னையில் கடந்த ஓராண்டில் மட்டும் 1.40 லட்சம் பட்டாக்கள் வழங்கப்பட்டுள்ளன: உதயநிதி பெருமிதம் | Udhayanidhi is proud for 1.40 lakh pattas have been issued in Chennai in the last one year alone

1379710
Spread the love

சென்னை: சென்​னை​யில் கடந்த ஓராண்​டில் மட்​டும் 1.40 லட்​சம் பட்​டாக்​கள் வழங்​கப்​பட்​டுள்​ள​தாக, துணை முதல்​வர் உதயநிதி ஸ்டா​லின் பெரு​மிதம் தெரி​வித்​துள்​ளார். வரு​வாய் மற்​றும் பேரிடர் மேலாண்​மைத் துறை சார்​பில் பயனாளி​களுக்கு வீட்​டுமனைப் பட்டா வழங்​கும் நிகழ்ச்சி சென்னை காரம்​பாக்​கத்​தில் நேற்று நடை​பெற்​றது. துணை முதல்​வர் உதயநிதி ஸ்டா​லின் தலைமை வகித்து 1,600 பயனாளி​களுக்கு வீட்​டுமனைப் பட்​டாக்​களை வழங்​கி​னார்.

அப்​போது அவர் பேசி​ய​தாவது: உணவு, உடை, இருப்​பிடம் இவை 3-ம்​தான் ஒவ்​வொரு மனிதனுக்கு அடிப்​படைத் தேவை​கள். இதில் உடை, உணவு எல்​லோருக்​கும் கிடைத்​து​விடும். ஆனால், குடி​யிருக்​கும் இடம் பட்​டாவுடன் வேண்​டும் என்​பது​தான் இன்​றைக்கு இருக்​கும் மிகப்​பெரிய பிரச்​சினை.

வீட்​டுக்​குப் பட்டா இல்லை என்​றால், அதனால் ஏற்​படும் வேதனையைப் பட்​டியலிட முடி​யாது. மின் இணைப்பு வாங்க முடி​யாது. தண்​ணீர் இணைப்பு அவ்​வளவு எளி​தாகக் கிடைத்​து​வி​டாது. வங்​கிக் கடன் கிடைப்​பது கடினம். எப்​போது யார் வந்து இடத்​தைக் காலி செய்​யச் சொல்​வார்​களோ என்ற பதற்​றம் கூடு​தலாக இருக்​கும்.

எனவே, சென்னை மற்​றும் அதைச் சுற்றி இருக்​கும் பகு​தி​களில் குடி​யிருக்​கும் மக்​களுக்கு உடனடி​யாகப் பட்டா வழங்க வேண்​டும் என முதல்​வர் உத்​தர​விட்​டார். இதற்​காக வரு​வாய்த் துறை அமைச்​சர் தலை​மை​யில் ஒரு குழு அமைக்​கப்​பட்​டது. அந்​தக் குழு​வின் பரிந்​துரைப்​படி கடந்த ஒராண்​டில் மட்​டும் சென்னை மாவட்​டத்​தில் 1.40 லட்​சம் பயனாளி​களுக்கு பட்டா வழங்​கப்​பட்​டுள்​ளது.

அதே​போல், திமுக அரசு பொறுப்​பேற்​றது முதல் தமிழகம் முழு​வதும் 19 லட்​சம் பட்​டாக்​கள் வழங்​கப்​பட்​டிருக்​கின்​றன. இவ்​வாறு பல முற்​போக்​கான திட்​டங்​களின் மூலம், இந்​தி​யா​விலேயே நம்​முடைய மாநிலம் 11.19 சதவீத வளர்ச்​சி​யோடு முதலிடத்​தைப் பிடித்திருக்​கிறது.

இதனால் திமுக அரசுக்கு ஒவ்​வொரு நாளும் மக்​களு​டைய அன்​பும், ஆதர​வும் பெரு​கிக்​கொண்​டிருக்​கிறது. அரசைத் தேடி மக்​கள் வரவேண்​டும் என்ற நிலை​மையை மாற்​றி, இன்​றைக்கு மக்​களைத் தேடி அரசு வந்து கொண்​டிருக்​கிறது. இவ்​வாறு அவர் பேசினார்.

இந்​நிகழ்​வில், அமைச்​சர்​கள் கே.கே.எஸ்​.எஸ்​.ஆர்​.​ராமச்​சந்​திரன், சு.​முத்​து​சாமி, மா.சுப்​பிரமணி​யன், மேயர் பிரி​யா, தமிழ்​நாடு வீட்டு வசதி வாரி​யத் தலை​வர் பூச்சி எஸ்​.​முரு​கன், வரு​வாய்த் துறை செயலர் பெ.அ​மு​தா, நில அளவை மற்​றும் நில​வரித் திட்ட இயக்​குநர் தீபக் ஜேக்​கப், தமிழ்​நாடு வீட்​டு​வசதி வாரிய மேலாண்மை இயக்​குநர் கணேசன், மாவட்ட ஆட்​சி​யர் ரஷ்மி சித்​தார்த் ஜகடே உள்​ளிட்​டோர் பங்​கேற்​றனர்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *