சென்னையில் கனமழை: நாளை 8 விரைவு ரயில்கள் ரத்து!

Dinamani2f2024 10 152f4s8v7cht2fpti10152024000221a.jpg
Spread the love

பேசின் பிரிட்ஜ் – வியாசர்பாடி ரயில் நிலையங்களுக்கு இடையே ரயில் மேம்பாலத்தில் மழை நீர் தேங்கியுள்ளதையடுத்து, 8 விரைவு ரயில்கள் புதன்கிழமை(அக்.16) ரத்து செய்யப்பட்டுள்ளன.

இது குறித்து தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது,

  • அதிகாலை 5 மணிக்கு புறப்பட வேண்டிய ஜோலார்பேட்டை – சென்னை சென்ட்ரல் ஏலகிரி எக்ஸ்பிரஸ் (16090) ரயில் ரத்து.

  • காலை 6.25 மணிக்கு புறப்பட வேண்டிய திருப்பதி – சென்னை சென்ட்ரல் எக்ஸ்பிரஸ் (16204) ரயில் ரத்து.

  • காலை 6.25 மணிக்கு புறப்பட வேண்டிய சென்னை சென்ட்ரல் – திருப்பதி சப்தகிரி எக்ஸ்பிரஸ் (16057) ரயில் ரத்து.

  • மாலை 4.35 மணிக்கு புறப்பட வேண்டிய சென்னை சென்ட்ரல் – திருப்பதி எக்ஸ்பிரஸ் (16203) ரயில் ரத்து.

  • மாலை 5.55 மணிக்கு புறப்பட வேண்டிய சென்னை சென்ட்ரல் – ஜோலார்பேட்டை ஏலகிரி எக்ஸ்பிரஸ் (16089) ரயில் ரத்து

  • இரவு 9 மணிக்கு புறப்பட வேண்டிய ஈரோடு – சென்னை சென்ட்ரல் ஏற்காடு எக்ஸ்பிரஸ் (22650) ரயில் ரத்து.

  • இரவு 10.30 மணிக்கு புறப்பட வேண்டிய சென்னை சென்ட்ரல் – போடிநாயக்கனூர் சூப்பர்ஃபாஸ்ட் எக்ஸ்பிரஸ் (20601) ரயில் ரத்து.

  • இரவு 10.50 மணிக்கு புறப்பட வேண்டிய சென்னை சென்ட்ரல் – கேஎஸ்ஆர் பெங்களூரு சூப்பர்ஃபாஸ்ட் மெயில் (12657) ரயில் ரத்து.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *