சென்னையில் தெரு நாய்கள், செல்ல பிராணிகளுக்கு உரிமம் வழங்க ஒருங்கிணைந்த மேலாண்மை இணையதளம் தொடக்கம் | Integrated management website launched to license stray dogs and pets in Chennai

1378625
Spread the love

சென்னை: சென்னை மாநகரில் தெரு நாய்​கள் மற்​றும் செல்​லப் பிராணி​களுக்கு உரிமம் வழங்​குதல், மைக்​ரோசிப் பொருத்​துதல் உள்​ளிட்ட பணி​களுக்கு ஒருங்​கிணைந்த மேலாண்மை இணை​யதளம் தொடங்கப்பட்டுள்ளது. சென்னை மாநக​ராட்சி எல்​லைக்​குள் செல்​லப் பிராணி​களை வளர்ப்​ப​தற்கு உரிமம் பெறு​வது கட்​டாய​மாக்​கப்​பட்​டுள்​ளது.

செல்​லப் பிராணி​கள் வளர்ப்பை முறைப்​படுத்த கடந்த 2023-ம் ஆண்​டு, ஆகஸ்ட் மாதம் முதல் மாநக​ராட்சி இணை​யதளம் வாயி​லாக செல்​லப்​பி​ராணி உரிமம் பெறு​வது நடை​முறை​யில் உள்​ளது.

செல்​லப் பிராணி​களின் உரிமை​யாளர் தங்​களின் புகைப்​படம், முகவரிச் சான்​று, செல்​லப்​பி​ராணி புகைப்​படம் மற்​றும் வெறி​நாய்க்​கடி நோய் தடுப்​பூசி செலுத்​தப்​பட்ட சான்​றிதழ் ஆகிய​வற்றை பதிவேற்​றம் செய்து ரூ.50 உரிமக் கட்​ட​ண​மாகச் செலுத்தி உரிமம் பெற்று வரு​கின்​றனர். கடந்த 2024-ம் ஆண்​டு​முதல் இந்த ஆண்டு செப்​டம்​பர் மாதம் வரை 12,393 உரிமங்​கள் வழங்​கப்​பட்​டுள்​ளன.

இந்​நிலை​யில் நாட்டிலேயே முதன்​முறை​யாக சென்னை மாநக​ராட்​சி​யில் நாய்​களுக்கு மைக்​ரோசிப் செலுத்​துதல், உரிமம் வழங்​குதல் உள்​ளிட்ட ஒருங்​கிணைந்த மேலாண்மை இணை​யதள சேவை உரு​வாக்​கப்​பட்​டுள்​ளது. இந்த சேவையை ரிப்​பன் மாளிகை வளாகத்​தில் நேற்று நடை​பெற்ற நிகழ்ச்​சி​யில் மேயர் ஆர்​.பிரியா நேற்று தொடங்​கி​வைத்​தார்.

பின்​னர் அவர் செய்​தி​யாளர்​களிடம் கூறிய​தாவது: மாநக​ராட்​சிப் பணி​யாளர்​கள் வீடு​வீ​டாகச் சென்று செல்​லப் பிராணி​கள் குறித்த கணக்​கெடுப்​பும், உரிமம் வழங்​கு​வதற்​கான வழி​காட்​டு​தல்​களை வழங்​கும் பணி வரும் நவம்​பர் மாதம் முதல் தொடங்​கப்​படும். நாய்​களை முறை​யாகப் பிடித்து விடு​விப்​பதை உறுதி செய்​வதற்​காக, க்யூஆர் குறி​யீடு காலர்​கள் மற்​றும் மைக்ரோ சிப் பொருத்​தும் பணி மேற்​கொள்​ளப்​பட்டு வரு​கிறது. இது​வரை 12,250 தெரு​நாய்​களுக்கு மைக்ரோ சிப் பொருத்​தப்​பட்​டுள்​ளது.

கடந்த 2021-ம் ஆண்டு முதல் தற்​போது வரை 72,345 தெரு​நாய்​களுக்கு கருத்​தடை அறுவை சிகிச்​சை​யும் வெறி​நாய்க்​கடி நோய் தடுப்​பூசி​யும் செலுத்​தப்​பட்​டுள்​ளது. நாய்​கள் தொடர்​பாக 1913 என்​கிற எண்​ணிலும், 9445061913 என்ற வாட்​ஸ்​-அப் எண்​ணிலும் புகார்​களைத் தெரிவிக்​கலாம்.

இவ்​வாறு அவர் கூறி​னார். இந்​நிகழ்ச்​சி​யில் துணை மேயர் மு.மகேஷ்கு​மார், ஆணை​யர் ஜெ. குமரகுருபரன், இணை ஆணை​யர் வீ.ப.ஜெயசீலன், நிலைக்​குழுத் தலை​வர் (சு​கா​தா​ரம்) கோ.​சாந்​தகு​மாரி, கால்​நடை மருத்​துவ அலு​வலர் ஜெ.க​மால் உசேன் உள்​ளிட்​டோர்​ கலந்​து​கொண்​டனர்​.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *