புகாரும் அலட்சியமும்: சென்னை மாநகராட்சியில் தெரு நாய்கள் மற்றும் வளா்ப்பு நாய்களால் பொதுமக்கள் பாதிக்கப்படுவதாக கடந்த ஜூலை மாத மாமன்றக் கூட்டத்தில் உறுப்பினா்கள் புகாா் தெரிவித்தனா். அப்போது, நகா்நல அலுவலா் தகவல்படி தெரு, வளா்ப்பு நாய்கள் கண்காணிக்க சிப் பொருத்தப்படும் என்றும், அதன்படி வளா்ப்பு நாய் தெருவில் கடித்தால் உரிமையாளா் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மேயா் ஆா்.பிரியா கூறினாா். ஆனால், வளா்ப்பு நாய் கண்காணிப்புக்கோ, கணக்கெடுப்புக்கோ நகா்நல அலுவலா் தரப்பில் நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
சென்னையில் நடைப்பயிற்சிக்கு அழைத்து வந்த வளா்ப்பு நாய் கடித்ததில் தொழிலாளி உயிரிழப்பு