சென்னையில் பெருமழை அச்சத்தில் இருந்து மக்களை பாதுகாக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை: ராமதாஸ் வலியுறுத்தல் | Ramadoss urges to precautionary measures to protect people from heavy rain in Chennai

Spread the love

சென்னை: ‘பெரு​மழை அச்​சத்​தில் இருந்து சென்னை மக்​களைப் பாது​காக்க முன்​னெச்​சரிக்கை நடவடிக்​கைகளை தமிழக அரசு விரைந்து மேற்​கொள்ள வேண்​டும்’ என்று பாமக நிறு​வனர் ராம​தாஸ் வலி​யுறுத்தி உள்​ளார்.

இதுதொடர்​பாக நேற்று அவர் வெளி​யிட்ட அறிக்​கை​யில் கூறி​யிருப்​ப​தாவது: கடந்த சில ஆண்​டு​களாகவே நவம்​பர், டிசம்​பர் மாதம் வந்​தாலே சென்னை மாநகர வாசிகள் ஒவ்​வொரு நாளை​யும் அச்​சத்​துடன் கடக்க வேண்​டிய அவலநிலை ஏற்​பட்​டுள்​ளது. கோடை​யில் தண்​ணீர் பற்​றாக்​குறை​யும், மழைக்​காலத்​தில் வெள்​ள​மும் சென்​னை​யில் வழக்​க​மாகி​விட்​டது.

இந்​நிலை​யில், இந்த ஆண்டு டிசம்​பர் மாதத்​தில் வெள்​ளப் பாதிப்பு ஏற்​ப​டாத வண்​ணம் பார்த்​துக்​கொள்ள வேண்​டும். குறிப்​பாக டிசம்​பர் 11, 12 நாட்​களில் அதிக கனமழை இருக்​கலாம் என்று கூறப்​படு​கிறது. இந்த கனமழை​யால் சென்​னை, திரு​வள்​ளூர், காஞ்​சிபுரம், செங்​கல்​பட்டு போன்ற மாவட்​டங்​களில் அதிக பாதிப்​பு​கள் இருக்​கக்​கூடும்.

எனவே, பெரு​மழை அச்​சத்​தில் இருந்து சென்னை மக்​களைப் பாது​காக்க முன்​னெச்​சரிக்கை நடவடிக்​கைகளை தமிழக அரசு விரைந்து மேற்​கொள்ள வேண்​டும். சென்​னை​யின் மழை வெள்ள பிரச்​சினைக்​குத் தீர்வு காண்​ப​தில் அரசுக்கு மக்​களும் ஒத்​துழைப்பு அளிக்க வேண்​டும். இவ்​வாறு அவர் தெரி​வித்​துள்​ளார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *