சென்னையில் பேய் வீடு, ரீல்ஸ் எடுத்த இளைஞர்களால் என்ன ஆனது? – Kumudam

Spread the love

சென்னை அசோக் நகரில் கடந்த 2008 ஆம் ஆண்டு மூவர் படுகொலை செய்யப்பட்ட வீடு பாழடைந்து அப்படியே உள்ளது. இந்த மூவர் படுகொலை தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தி வருகிறது. இந்த பங்களாவில் 2008-க்கு பிறகு யாரும் தங்கவில்லை பூட்டியபடி உள்ளது. 

தற்போது  பாழடைந்த இந்த  வீட்டில் இரவு நேரத்தில் இளைஞர்கள் சிலர் அத்து மீறி வீட்டிற்குள் நுழைந்து வீடியோ எடுத்து வருகின்றனர். பேய்வீடு, அமானுஷ்யம் உள்ளதாக கூறி இந்த வீடியோக்களை இன்ஸ்டாகிராமில் ரில்ஸாக பதிவிட்டு வருகின்றனர். இந்த வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி பொதுமக்களிடம் அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது.

இது தொடர்பாக ஏராளமான புகார்கள் குவிந்த நிலையில், அசோக் நகரில் உள்ள அந்த பாழடைந்த பங்களாவிற்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.  இதனை மீறி இளைஞர்கள் யாரேனும் பாழடைந்த கட்டிடத்திற்குள் அத்துமீறி உள்ளே சென்று வீடியோ எடுத்தால் அவர்கள் கைது செய்யப்படுவார்கள் என சென்னை காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *