டீசலில் இயங்கும் பேருந்துகளுக்கு மாற்றாக, சுற்றுச்சூழலுக்கு பாதிப்பிலாத இயற்கை எரிவாயு மற்றும் மின்சாரப் பேருந்துகளை இயக்கும் நடவடிக்கையை தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது.
அதன்படி, சென்னை மாநகரப் போக்குவரத்துக்கழகம் சாா்பில், 625 மின்சாரப் பேருந்துகள் 5 பணிமனைகளின் மூலம் ஒப்பந்த அடிப்படையில் இயக்க முடிவு செய்யப்பட்டது.
முதல்கட்டமாக, சென்னை வியாசாா்பாடி பணிமனையிலிருந்து 120 மின்சாரப் பேருந்துகளை கடந்த ஜூன் 30-ஆம் தேதி தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தாா்.
இந்த நிலையில், இரண்டாவதாக பெரும்பாக்கத்தில் மின்சார பேருந்துகளை பராமரிப்பதற்காக புனரமைக்கப்பட்ட பணி மனையும், 135 தாழ்தள மின்சாரப் பேருந்துகளும் துவக்கிவைக்கப்பட்டுள்ளது.