சென்னை கடற்கரை – வேளச்சேரி ரயில் போக்குவரத்து! அக்டோபர் முதல் மீண்டும்!

Dinamani2f2024 052ffd126b09 Cd83 423a 8bff 77d4011bf6392fp 358393746.jpg
Spread the love

சென்னை கடற்கரை – வேளச்சேரி இடையே மின்சார ரயில் சேவை மீண்டும் அக்டோபர் மாதம் முதல் தொடங்கும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

சென்னை கடற்கரை – எழும்பூர் ரயில் முனையம் இடையே அமைக்கப்பட்டு வரும் 4-ஆம் வழித்தடப் பணி இறுதிகட்டத்தை எட்டியுள்ள நிலையில், அந்த பணிகள் நிறைவடைந்தவுடன் ரயில் சேவை மீண்டும் தொடங்கப்படவுள்ளது.

சென்னை கடற்கரை – எழும்பூர் இடையே 3 ரயில் வழித்தடம் உள்ளது. இதில், 2 வழித்தடங்களில் மின்சார ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றது. வெளிமாநிலங்களில் இருந்து வரும் சரக்கு மற்றும் பயணிகள் ரயில்களுக்கு ஒரு வழித்தடம் மட்டுமே உள்ளதால், அவை காத்திருந்து செல்ல வேண்டியுள்ளது.

இதற்கு தீா்வு காணும் நோக்கில் கடற்கரை – எழும்பூர் இடையேயான 4.30 கி.மீ. தொலைவுக்கு ரூ.270.20 கோடி செலவில் 4-ஆவது வழித்தடம் அமைக்கும் பணி கடந்த ஆண்டு ஆக. 27-ஆம் தேதி தொடங்கப்பட்டது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *