ரிப்பன் பில்டிங் கைதின் போது எழுந்த விமர்சனங்களால் அமைச்சர் சேகர் பாபு இப்போதெல்லாம் போராட்டத்தின் பக்கம் வெளிப்படையாகத் தலையிடுவதில்லை. பத்திரிகையாளர் சந்திப்புகளில் இது சம்பந்தமான கேள்விகளின்போது, ‘காது கேட்காது…’ என எஸ்கேப் ஆகத்தான் செய்தார்.
அவருக்கும் தூய்மைப் பணியாளர்கள் விவகாரம் சம்பந்தப்பட்ட நகராட்சி நிர்வாகத்துறைக்கும் எந்தத் தொடர்புமில்லை. அவருக்குக் கையை விரிப்பதில் பிரச்னை இல்லை. ஆனால், துறை சம்பந்தப்பட்ட அமைச்சர் கே.என்.நேருவும் போராட்டத்தைக் கண்டும் காணாமல் இருப்பதுதான் பிரச்னை என்கின்றனர் போராடுகிறவர்கள்.

சென்னையின் துணை மேயர் மகேஷ் குமார் இந்த விவகாரத்தைத் தீர்த்து வைப்பதில் ஆர்வம் காட்டியிருக்கிறார். கடந்த டிசம்பர் 18 ஆம் தேதி போராட்டத்தை முன்னெடுக்கும் உழைப்போர் உரிமை இயக்கத்தின் தலைவர் கு.பாரதியை, மகேஷ்குமார் அமைச்சர் நேருவின் வீட்டிற்கே அழைத்துச் சென்றிருக்கிறார்.
நம்பிக்கையோடு கோரிக்கை மனுவைக் கொடுத்து அனுப்பியிருக்கிறார்கள் போராடும் தூய்மைப் பணியாளர்கள். ஆனால், இவர்களைச் சந்திக்க வெறும் இரண்டே இரண்டு நிமிடங்களை மட்டுமே செலவழித்திருக்கிறார் அமைச்சர் நேரு.
‘துணை முதல்வரைச் சந்திக்க அவசரமா போறேன். 21 ஆம் தேதிக்கு மேல என்னனு பார்க்குறேன்’ என்றவர் கோரிக்கை மனுவை வாங்கிக் கொள்வதைப் போல ஒரு புகைப்படத்தை மட்டும் எடுத்துவிட்டு அனுப்பிவிட்டிருக்கிறார்.