சென்னை | மின்சார ரயில் சேவை 3 நாட்களுக்கு மாற்றம் | Electric train service changed for 3 days

1373018
Spread the love

சென்னை: சென்னை சென்ட்​ரல் – கூடூர் மார்க்​கத்​தில், பொன்​னேரி – கவரைப்​பேட்டை இடையே பொறி​யியல் பணி நடக்கவுள்ளதால், 19 மின்​சார ரயில்​களின் சேவை​யில் இன்று முதல் 3 நாட்​களுக்கு மாற்​றம் செய்​யப்​பட்​டுள்​ளது.

இதன்​படி, சென்னை சென்ட்​ரல் – கும்​மிடிப்​பூண்​டிக்கு ஆக.14, 16, 18 ஆகிய தேதி​களில் காலை 10.30, முற்​பகல் 11.35 மணி, சென்னை சென்ட்​ரல் -சூலூர்​பேட்​டைக்கு காலை 10.15, நண்​பகல் 12.10, மதி​யம் 1.05, சூலூர்​பேட்டை – சென்னை சென்ட்​ரலுக்கு மதி​யம் 1.15, பிற்​பகல் 3.10, இரவு 9 மணி ஆகிய நேரங்​களில் இயக்​கப்​படும் மின்​சார ரயில்​கள் ரத்து செய்​யப்​படு​கிறது.

சென்னை கடற்​கரை – கும்​மிடிப்​பூண்​டிக்கு காலை 9.40, நண்​பகல் 12.40, கும்​மிடிப்​பூண்டி – சென்னை கடற்​கரைக்கு காலை 10.55, கும் மிடிப்​பூண்டி – சென்னை சென்ட்​ரலுக்கு நண்​பகல் 12.00, பிற்​பகல் 2.30, 3.15, சூலூர்​பேட்டை – நெல்​லூருக்கு பிற்​பகல் 1.15, நெல்​லூர் – சூலூர்​பேட்​டைக்கு மாலை 6.45 மணிக்கு இயக்​கப்​படும் மின்​சார ரயில்​கள் ரத்து செய்​யப்​படு​கிறது.

செங்​கல்​பட்டு – கும்​மிடிப்​பூண்​டிக்கு காலை 9.55 மணிக்கு புறப்​படும் மின்​சார ரயில், சென்னை கடற்​கரை – கும்​மிடிப்​பூண்டி இடையே​யும், கும்​மிடிப்​பூண்டி – தாம்​பரத்​துக்கு பிற்​பகல் 3 மணிக்கு புறப்​படும் மின்​சார ரயில், கும்​மிடிப்​பூண்டி – சென்னை கடற்கரை இடையே​யும் பகுதி ரத்து செய்​யப்பட உள்​ளது.

ரத்து செய்​யப்​படும் மின்​சார ரயில்​களுக்கு பதிலாக, அதே​நாட்​களில், சென்னை சென்ட்​ரல், கடற்​கரை​யில் இருந்து பொன்​னேரி இடையே தலா ஒரு பயணி​கள் சிறப்பு ரயில் இயக்​கப்​படும். மீஞ்​சூர்- சென்னை சென்ட்ரல் இடையே பயணி​கள் சிறப்பு ரயிலும் இயக்​கப்பட உள்​ளது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *