குறிப்பாக, சஞ்சு சாம்சன் களமிறங்கி எதிரணியின் பந்துவீச்சைச் சிதறடித்த விதம் அருமை; அவர் ஒரு பிரமாதமான இன்னிங்ஸை ஆடினார்.
எங்களது பந்துவீச்சு முயற்சியைப் பார்த்து நான் உண்மையிலேயே பெருமைப்படுகிறேன். வெளிப்படையாகச் சொல்லப்போனால், எங்களிடம் பந்துவீச்சில் எதிரணியை மிரட்டும் “எக்ஸ்-ஃபேக்டர்’ (X-factor) வீரர்கள் யாரும் இல்லை. அதனால், பந்துகளைச் சரியான லென்த்தில் வீசுவதிலேயே நாங்கள் அதிகக் கவனம் செலுத்தி வருகிறோம்.
கடந்த சில போட்டிகளில் ஒன்றிரண்டு ஓவர்கள்தான் எங்களுக்கு வெற்றியைப் பறித்தன, ஆனால் இன்று பந்துவீச்சாளர்கள் திட்டத்தைச் சரியாகச் செயல்படுத்தினர்.
சென்னையில் விளையாடுவதே தனி சுகம்தான். முடிவு எதுவாக இருந்தாலும் சென்னை ரசிகர்கள் எப்போதும் எங்களுக்குப் பின்னால் இருப்பார்கள். கிரிக்கெட்டை ரசிக்கும் அழகான மனிதர்கள் அவர்கள்” என்று நெகிழ்ச்சியுடன் பேசினார்.