இன்று (டிச. 1) வழக்கம்போல பள்ளி மற்றும் கல்லூரிகள் செயல்பட்டதால் மாணவர்கள் கடும் அவதிக்கு உள்ளாகினர். இந்த நிலையில் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய நான்கு மாவட்டங்களில் உள்ள பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு நாளை (02.12.2025) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
Chennai: வெளுத்து வாங்கும் மழை
சென்னையில் அதிகபட்சமாக இன்று (01.12.2025) எண்ணூரில் 19 செ.மீ மழை பதிவாகியிருக்கிறது. அதேபோல மணலி வார்டு 18ல் 16 செ.மீ மழையும், பாரிஸில் 15 செ.மீ மழையும், ஐஸ் ஹவுஸில் 14 செ.மீ அளவிற்கு மழையும், விம்கோ நகரில் 13 செ.மீ அளவிற்கு மிக கனமழையும், வடபழனியில் 13 செ.மீ மழையும் பதிவாகியுள்ளன.
பேசின் பிரிட்ஜ், சாலிகிராமம் மற்றும் மேடவாக்கத்தில் 12 செ.மீ அளவிற்கு மழை பொழிவும், காசிமேட்டில் 11 செ.மீ அளவிற்கு மழையும், நுங்கம்பாக்கம் மற்றும் சைதாபேட்டையில் 10.5 செ.மீ அளவிற்கு மழைப்பொழிவும், தண்டையார்பேட்டையில் 10.4 செ.மீ மழைப்பொழிவும் பதிவாகியிருக்கிறது.