சென்னை: ஹனிட்ராப்பில் சிக்கிய தாசில்தார் – மனைவி, தோழியுடன் கைதான பிரபல ரௌடியின் பின்னணி! | rowdy and his wife arrested in honey trap case

Spread the love

சென்னை சோழிங்கநல்லூர் பகுதியில் வசித்து வரும், தாசில்தார் ஒருவருக்கு செல்போன் செயலி மூலம் பெண் ஒருவர் அறிமுகமாகியிருக்கிறார். அதைத் தொடர்ந்து தாசில்தாரும் அந்தப் பெண்ணும் காதல் ரசம் சொட்ட சொட்ட பேசி வந்திருக்கிறார்கள். இதையடுத்து இருவரும் நேரில் சந்திக்க முடிவு செய்திருக்கிறார்கள். அதன்படி சோழிங்கநல்லூர் பகுதியில் தனியார் விடுதிக்கு இருவரும் சென்று ஒருவரை ஒருவர் நேரில் பார்த்து பேசிக் கொண்டிருந்தபோது, ஒரு கும்பல் அங்கு வந்தது. தாசில்தாரை மிரட்டிய அந்தக் கும்பல் அவரிடமிருந்து 25 சவரன் தங்க நகைகள், 15,000 ரூபாய் பணம் ஆகியவற்றைப் பறித்தது. பின்னர் இங்கு நடந்த சம்பவத்தை வெளியில் சொன்னால் உனக்குதான் அவமானம் எனக் கூறிய அந்தக் கும்பல், தாசில்தாருக்கு மயக்க ஊசி ஒன்றை போட்டுவிட்டு தப்பிச் சென்றுவிட்டது.

பிரியதர்ஷினி

பிரியதர்ஷினி

மயக்கம் தெளிந்த பிறகு நகை, பணத்தைப் பறிக்கொடுத்த தாசில்தார் சென்னை செம்மஞ்சேரி காவல் நிலையத்தில் புகார் ஒன்றைக் கொடுத்தார். அதில் முழு விவரங்களைக் குறிப்பிட்ட அவர், தன்னை ஏமாற்றியது எப்படி என்பதையும் போலீஸாரிடம் விவரமாக கூறினார். அதைத் தொடர்ந்து போலீஸார் விசாரணை நடத்தினர். விசாரணையில் தாசில்தாரை ஹனிட்ராப் மூலம் வீழ்த்தியது தெரியவந்தது. அது தொடர்பாக தாசில்தாரிடம் விசாரணை நடத்திய போலீஸார், அந்தப் பெண் குறித்த விவரங்களைச் சேகரித்தனர். அதில், தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த பிரபல ரௌடி ஹைகோர்ட் மகாராஜா தலைமையிலான டீம் தாசில்தாரை மிரட்டிப் பணம் பறித்த தகவல் தெரியவந்தது. உடனடியாக தாம்பரம் போலீஸ் கமிஷனர் அமல்ராஜ் உத்தரவின் பேரில் பள்ளிக்காரணை துணை ஆணையர் பொன் கார்த்திக் குமார் மேற்பார்வையில் செம்மஞ்சேரி உதவி ஆணையாளர் வெங்கடேசன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படை போலீஸாரின் பிடியில் பிரபல ரௌடி ஹைகோர்ட் மகாராஜா, அவரின் மனைவி பிரியதர்ஷினி, தோழி தனலட்சுமி ஆகியோர் சிக்கினர். அப்போது போலீஸாரிடமிருந்து தப்பிக்க முயன்றபோது ரௌடி ஹைகோர்ட் மகாராஜாவுக்கு கை, காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது. அதனால் அவருக்கு மாவு கட்டு போடப்பட்டது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *