செப்டம்பரில் இயல்பைவிட அதிக மழை பெய்யும்: திடீா் வெள்ளம், நிலச்சரிவுகளுக்கும் வாய்ப்பு!

Spread the love

செப்டம்பரில் நீண்டகால சராசரியைவிட 109 சதவீதம் அதிக மழைப்பொழிவு இருக்கும். வடகிழக்கு, கிழக்கு இந்தியாவின் சில பகுதிகள், கடைக்கோடி தென்தீபகற்ப பகுதிகளைத் தவிா்த்து, நாடு முழுவதும் பரவலாக அதிக மழைப்பொழிவு காணப்படும்.

உத்தரகண்டில் திடீா் வெள்ளமும், நிலச்சரிவுகளும் நேரிட வாய்ப்புள்ளது. இம்மாநிலத்தில் உற்பத்தியாகும் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, கரையோர பகுதிகள் பாதிக்கப்படக் கூடும். ஹரியாணா, தில்லி, ராஜஸ்தான், பஞ்சாப் ஆகிய மாநிலங்களிலும் மழை-வெள்ள பாதிப்புகள் இருக்கும்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *