செயற்கை நுண்ணறிவு பாட பிரிவை தொடங்க வேண்டும்: பல்கலைக்கழங்களுக்கு அமைச்சர் வேண்டுகோள் | Minister appeals to universities to start Artificial Intelligence course

1379846
Spread the love

சென்னை: உயர் கல்​வி​யின் தரத்தை மேலும் உயர்த்​து​வது, திறன்​மிகுந்த மாணவர்​களை உரு​வாக்​கு​வது தொடர்​பான ஆய்​வுக்​கூட்டம் சென்​னை​யில் உள்ள மாநில உயர்​கல்வி மன்​றத்​தில் உயர்​கல்வி அமைச்​சர் கோவி.செழியன் தலை​மை​யில் நேற்று நடை​பெற்​றது. இதில் 13 அரசு பல்​கலைக்​கழகங்​களைச் சேர்ந்த பதி​வாளர்​கள், தேர்​வு​கட்​டுப்​பாட்டு அலு​வலர்​கள் பங்​கேற்​றனர். இதில், பல்​கலைக்​கழகங்​களின் கீழ் நடத்​தப்​படும் பாடப் பிரிவு​களின் செயல்​பாடு​கள் குறித்​தும், மாணவர்​களுக்கு வேலை​வாய்ப்​பு​கள் சிறந்த முறை​யில் கிடைக்​கப்​பெறுகிறதா என்​பது குறித்​தும் உயர்​கல்வி நிறு​வனங்​களில் பாடத்​திட்​டங்​கள் மற்​றும் கேள்​வித்​தாள்​களின் தரம் குறித்​தும் ஆய்வு செய்​யப்​பட்​டது.

மேலும் உயர்​கல்வி மாணவர்​களின் கற்​றல் மேம்​பாடு, மாநில மற்​றும் தேசிய அளவி​லான தொழில்​நுட்ப போட்​டிகளில் தமிழகத்​தைச் சேர்ந்த மாணவர்​களின் பங்​கேற்​பு, வழங்​கப்​பட்டு வரும் பாடப்​பிரிவு​களின் கிரெடிட் கட்​டமைப்​பு, பல்​கலைக்​கழகங்​களின் ஆராய்ச்சி சூழல் பற்​றி​யும் ஆய்வு மேற்​கொள்​ளப்​பட்​டது.

அப்​போது, செயற்கை நுண்​ணறிவு (AI), இயந்​திரக் கற்​றல் (மெஷின் லேர்​னிங்) போன்ற புதிய பாடப்​பிரிவு​கள் தொடங்​கு​வது, மாணவர்​களின் மொழி​யாற்​றலை மேம்​படுத்​து​வது, வேலை​வாய்ப்​பு​களை உறுதி செய்​யும் வகை​யில் திறன் மேம்​பாட்டு பயிற்​சிகள் வழங்​கு​வது போன்​றவற்​றில் கூடு​தல் கவனம் செலுத்த வேண்​டும் என்று பல்​கலைக்​கழக அதி​காரி​களை அமைச்​சர் கேட்​டுக்​கொண்​டார். கூட்​டத்​தில் உயர்​கல்​வித் துறை​யின் செயலர் பொ.சங்​கர், மாநில உயர்​கல்வி மன்​றத் துணைத்தலை​வர் எம்​.பி.​விஜயகு​மார், உறுப்​பினர்- செயலர் டி.வேல்​ முரு​கன் கலந்​து ​கொண்​டனர்​.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *