செல்ஃபி எடுக்க முயன்று, ரயிலில் இருந்து தவறி விழுந்த இளம்பெண் பலி

Dinamani2fimport2f20202f112f102foriginal2fmurder1.jpg
Spread the love

ஒடிசாவில் செல்ஃபி எடுக்க முயன்று, ரயிலில் இருந்து தவறி விழுந்த இளம்பெண் பலியான நிகழ்வு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஒடிசா மாநிலம், கியோஞ்சர் மாவட்டத்தில் உள்ள தங்கிரியாபால்-சகடபதா ரயில் நிலையம் அருகே செல்ஃபி எடுக்க முயன்ற 21 வயது இளம்பெண் வெள்ளிக்கிழமை ஓடும் ரயிலில் இருந்து விழுந்தார். இதில் அவர் சம்பவ இடத்திலேயே பலியானார்.

பலியானவர் தலாங் கிராமத்தைச் சேர்ந்த நம்ரதா பெஹரா என அடையாளம் காணப்பட்டுள்ளார். அவர் புவனேஸ்வரில் உள்ள கல்லூரியில் எம்சிஏ படித்து வந்தார். ஓடும் ரயிலுக்கு வெளியே உள்ள இயற்கை அழகை ரசித்த அவர், செல்ஃபி எடுக்க முயன்றதாக கூறப்படுகிறது.

பாகிஸ்தானில் முதல் குரங்கம்மை பாதிப்பு!

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *