"செல்லாத நோட்டுக்கு மதிப்பு இருக்கிறதா? அதுபோலத் தான் அவரும்.!"- செங்கோட்டையன் குறித்து எடப்பாடி

Spread the love

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி திருச்சியில் செய்தியாளர்களைச் சந்தித்து பேசியிருக்கிறார்.

அப்போது விஜய் குறித்து பேசிய அவர், ” விஜய் ஊழல்வாதி என்பதற்கு நீதிமன்றமே சாட்சி. அவர் எங்கே வெளியில் வருகிறார்.

ஏதோ ஒரு கட்சியை ஆரம்பித்தார். நடக்கக்கூடாத ஒரு சம்பவம் (கரூர் சம்பவம்) நடந்தது.

ஒரு சம்பவம் நடந்தால் துணிந்து நின்று அதனை எதிர்கொள்வதுதான் ஒரு அரசியல் கட்சி தலைவரின் கடமை.

ஆனால் அவர் அந்த சம்பவம் நடந்து 72 நாட்கள் வீட்டை விட்டு வெளியில் வரவே இல்லை.

விஜய், செங்கோட்டையன்
விஜய், செங்கோட்டையன்

15 நாள் அலுவலகத்தையே மூடிவிட்டார்கள். கட்சி இருக்கிறதா? இல்லையா? என்ற நிலை ஏற்பட்டுவிட்டது. இதுதான் அந்த கட்சியின் நிலைமை” என்று தெரிவித்திருக்கிறார்.

தொடர்ந்து செங்கோட்டையன் குறித்த கேள்விக்கு, ” செல்லாத நோட்டுக்கு மதிப்பு இருக்கிறதா? அதைப் பற்றி பேசி எந்தப் பயனும் இல்லை.

அவரும் செல்லாத நோட்டாக மாறிவிட்டார். செல்லாத நோட்டுக்கு என்ன மதிப்பு இருக்கிறதோ? அதே மதிப்பு தான் அவருக்கும்…” என்று பதிலளித்திருக்கிறார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *