செல்ல பிராணிகளுக்கு மைக்ரோ சிப் பொருத்தும் பணி: மேலாண்மை செய்ய செயலியை உருவாக்கும் மாநகராட்சி | Microchipping of pets

1369816
Spread the love

சென்னை: சென்னை மாநக​ராட்சி சார்​பில், செல்​லப் பிராணி​கள் மற்​றும் தெரு நாய்​களுக்கு மைக்ரோ சிப் பொருத்​தும் பணிகளை மேலாண்மை செய்ய ஸ்மார்ட் போன் செயலியை உரு​வாக்க நடவடிக்கை எடுக்​கப்​பட்டு வருகிறது.

சென்னை மாநக​ராட்​சிப் பகு​தி​களில் தெரு​நாய்​களைக் கட்​டுப்​படுத்​த​வும், வெறி​நாய்க்​கடி நோய் பரவுவதை தடுக்​க​வும், புளியந்தோப்​பு, லா​யிட்ஸ் காலனி, கண்​ணம்​மாபேட்​டை, மீனம்பாக்​கம் மற்​றும் சோழிங்​க நல்​லூர் ஆகிய 5 இடங்​களில் நாய்​கள் இனக்​கட்​டுப்​பாட்டு மையங்​கள் அமைக்​கப்​பட்​டுள்​ளன. மேற்​கூறிய 5 இடங்​கள் மற்​றும் நுங்​கம்​பாக்​கத்​தில் செல்​லப் பிராணி​கள் சிகிச்சை மையங்​களும் செயல்​பட்டு வரு​கின்​றன.

தெரு​நாய்​கள் பெருக்​கத்​தைக் கட்​டுப்​படுத்த மேலும் 10 மண்​டலங்​களில் நாளொன்​றுக்கு தலா 30 தெரு​நாய்​களுக்கு கருத்​தடை அறுவை சிகிச்​சைகள் மற்​றும் ரேபிஸ் தடுப்​பூசிகள் செலுத்​தும் வகை​யில் நாய்​கள் இனக்​கட்​டுப்​பாட்டு மையங்​கள் கட்​டப்​பட்டு வரு​கின்​றன. சென்​னை​யில் அண்​மை​யில் நடத்​தப்​பட்ட கணக்​கெடுப்​பில் 1.80 லட்சம் தெரு​நாய்​கள் இருப்​ப​தாக கண்டறியப்பட்டுள்​ளது.

தெரு நாய்​கள் மற்​றும் செல்​லப்​பி​ராணி​கள் என 2 லட்​சம் நாய்​களுக்​கும் அதன் விவரங்​கள் ஆன்​லைன் போர்​டலில் பதிவு செய்து மைக்​ரோசிப் பொருத்த மாநக​ராட்சி திட்​ட​மிட்​டுள்​ளது. மேலும், நாய்​களை பிடித்​தல், தடுப்​பூசி செலுத்​துதல், கண்​காணித்​தல் போன்ற பணி​களை மேலாண்மை செய்ய தனி ஸ்மார்ட் போன் செயலியை​யும் மாநக​ராட்சி உரு​வாக்க திட்​ட​மிட்​டுள்​ளது.

இது தொடர்​பாக மாநக​ராட்சி அதி​காரி​கள் கூறிய​தாவது: தெரு​நாய்​கள் பிடிக்​கப்​படும் இடங்​கள், கருத்​தடை செய்த நாள் விவரம், அகப்​புற ஒட்​டுண்ணி மருந்து செலுத்​தப்​பட்ட விவரம், இதர சிகிச்சை விவரங்​களும், செல்​லப் பிராணி​களின் உரிமை​யாளர் விவரம், உரிமம் விவரம், ரேபிஸ் தடுப்​பூசி, சிகிச்சை அளித்த கால்​நடை மருத்​து​வர் விவரம் உள்​ளிட்ட அனைத்து விவரங்​களும் ஆன்​லைன் போர்ட்​டலில் பதிவு செய்து அதன் விவரங்​கள் அடங்​கிய மைக்​ரோசிப் நாய்​களின் உடலில் பொருத்​தப்​படும்.

இந்த விவரங்​களை மேலாண்மை செய்ய ஸ்மார்ட் போன் செயலி​யும் உரு​வாக்​கப்​படும். மைக்ரோ சிப் பொருத்​துதல் மற்​றும் செயலியை உரு​வாக்க டெண்​டர் கோரப்​பட்​டுள்​ளது. இது விரை​வில் பயன்​பாட்​டுக்கு வரும். இந்த செயலிகள் வழி​யாக செல்​லப் பிராணி​களுக்கு எப்​போது ரேபிஸ் தடுப்​பூசி போட வேண்​டும் என்ற அலர்ட், உரிமை​யாளரின் ஸ்மார்ட் போனில் தெரிவிக்கப்படும்.​ இவ்வாறு அதி​காரி​கள் தெரிவித்துள்ளனர்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *