அதனால ஒரு மேடையில பாடறதை வச்சு எங்களை முத்திரை குத்த வேண்டாம்னு கேட்டுக்க விரும்பறேன்.
தவெக மேடையில நான் பாடிய அடுத்த நாளே அது தொடர்பான என்னுடைய விளக்கத்தையும் தந்துட்டேன், அந்தப் பிரச்னை அன்னைக்கே முடிஞ்சது.
சமூக ஊடகங்களில்தான் சிலர் எப்பவும் ஏதாவது சர்ச்சை கிடைக்காதானு தேடிட்டிருக்காங்க. அவங்கதான் சின்ன பிரச்னையா இருந்தாலும் பெரிசு படுத்திடுறாங்க.
சினிமா விழாவுல விருது வாங்கறதுக்கு முன்னாடி அமைச்சர் எங்கிட்ட அப்படிச் சொன்னது நிஜம்தான். அவர் அப்படிப் பேசினதும் எனக்கே கொஞ்சம் சங்கடமாத்தான் போச்சு. என்ன சொல்றதுனு யோசிட்டிருந்தப்பவே துணை முதல்வர் அவர் பங்குக்கு ‘எங்க வருமானம் வருதோ அங்க போக வேண்டிதானே’னு சொல்லிட்டார். ஒரு மாதிரி ஆகிடுச்சு. உடனே துணை முதல்வர் சிரிச்சுகிட்டே, ‘நீங்க எல்லாருக்கும் பொதுவானவர்னு எனக்குத் தெரியும்’ எனச் சொல்லி, அந்தச் சூழலை எளிதாக்கினார்.
அவர்கிட்ட ஏற்கெனவே அறிமுகமானவங்கிற முறையில அவர் அதை சீரியஸா எடுத்துக்கிடலைன்னுதான் தெரிஞ்சது. இருந்தாலும் அந்த நேரத்துல அது கொஞ்சம் சங்கடமாத்தான் இருந்தது” என்கிறார்.