மும்பையில் 6 மாத குழந்தையை கொலை செய்த பெண்ணை காவல்துறையினர் கைது செய்தனர்.
மும்பையில் கோவந்தி நகரில் ஓர் ஆலையில் பணிபுரிந்து வந்த 43 வயதான பெண்ணுக்கும், அவரது 6 மாத மகனுக்கும் எச்ஐவி பாதிப்பு இருப்பது உறுதிசெய்யப்பட்டது.
இதனிடையே, தனது குழந்தையை வளர்க்கும் அளவுக்கு நிதிநிலையின்றி அவரது தாய் இருந்துள்ளார்.
இந்த நிலையில், தனது குழந்தையின் முகத்தில் தலையணையை அழுத்தி, மூச்சுத் திணற செய்துள்ளார்.
தொடர்ந்து, தான் வேலைபார்த்து வந்த ஆலையில் தனது சக ஊழியருடன் இதனைச் சொல்லியிருக்கிறார்போல. இதனையடுத்து, இருவருக்கும் ஏதோ வாக்குவாதம் ஏற்பட, பிரச்னையைத் தீர்க்க ஆலைக்குள் காவல்துறையினரும் வந்துள்ளனர்.