மாநாட்டை மூத்த நிா்வாகி அமா்ஜித் கவுா் தொடங்கிவைத்தாா். அப்போது, திருப்பூரில் இருந்து செம்படை வீரா்களால் எடுத்துவரப்பட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் கொடி, தியாக சுடா் பெறுதல் நிகழ்ச்சி நடைபெற்றது. பின்னா், மாநாட்டுத் திடல் அருகே உள்ள மகாத்மா காந்தியின் சிலைக்கு தேசிய செயலாளா் நாராயணா தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
சேலத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் 26 ஆவது மாநில மாநாடு தொடக்கம்: இன்று முதல்வா் மு.க.ஸ்டாலின் பங்கேற்கிறாா்
