சேலம்: பிரசாரத்தின்போது மேடையிலேயே மயங்கிய ராமதாஸ்; என்ன நடந்தது?

Spread the love

பாமக நிறுவனர் ராமதாஸ் சேலம் பள்ளப்பட்டியில் பரப்புரையில் ஈடுபட்டிருந்தபோது திடீரென மயங்கி விழவே அருகிலிருக்கும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட்டிருக்கிறார்.

ராமதாஸ்
ராமதாஸ், சசிகலா

பாமகவில் ஏற்பட்ட பிளவால் ராமதாஸூம் அன்புமணியும் பிரிந்து நின்று இரண்டு அணிகளாகச் செயல்பட்டு வருகின்றனர். நிர்வாகிகள் பெரும்பாலானோர் அன்புமணியின் பக்கமே நிற்பதால் மாம்பழச் சின்னம் அன்புமணிக்கே ஒதுக்கப்பட்டிருக்கிறது.

இந்நிலையில் சசிகலாவின் அ.இ.பு.த.ம.மு.க கட்சியோடு கூட்டணி அமைத்த ராமதாஸ் துரோகத்தை வீழ்த்துவோம் எனச் சபதம் ஏற்றார்.

அந்தக் கூட்டணியில் 37 தொகுதிகளுக்கு வேட்பாளரை அறிவித்தார். அதில் 30 வேட்பாளர்களுக்கு கேஸ் சிலிண்டர் சின்னம் ஒதுக்கப்பட்டது. மற்றவர்களுக்கு வெவ்வேறு சின்னம் ஒதுக்கப்பட்டிருக்கிறது.

இந்தக் கூட்டணிக்காக தென் மாவட்டங்களில் சசிகலா பிரசாரத்தைத் தொடங்கிய நிலையில், வன்னியர்கள் அதிகமிருக்கும் பகுதிகளில் தன்னுடைய வேட்பாளர்களை ஆதரித்து ராமதாஸ் பிரசாரம் செய்து வருகிறார்.

ராமதாஸ்
ராமதாஸ்

அந்தவகையில், சேலம் பள்ளப்பட்டியில் வேட்பாளர்களை ஆதரித்து பரப்புரையில் ஈடுபட்டிருக்கையில், ராமதாஸ் உடல்நலக்குறைவால் மயக்கமடைந்திருக்கிறார். உடனடியாக அருகிலுள்ள தனியார் மருத்துவமனைக்கு ராமதாஸ் அழைத்து செல்லப்பட்டிருக்கிறார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *