சேலம் மருத்துவ மாணவி கொலை வழக்கு – ஒரு மாத தேடுதல் வேட்டையில் தந்தை கைது-நடந்தது என்ன? | medical student murder, Father arrested what happened?

Spread the love

சேலத்தை அடுத்த சித்தர்கோயில் அருகில் தனியார் ஹோமியோபதி மருத்துவக் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இந்தக் கல்லூரியில் திருநெல்வேலி மாவட்டம், வீரவநல்லூர் பாரதி நகரைச் சேர்ந்த வரதராஜன் என்பவரின் மகள் வர்ஷினி (22) இறுதியாண்டு படித்துவந்தார். இவர், கல்லூரி அருகே உள்ள நல்லாம்பட்டிநாயக்கன்பட்டியில் லட்சுமணன் என்பவரின் அடுக்குமாடி வீட்டில் சக மாணவிகளுடன் அறை எடுத்து தங்கியிருந்தார்.

இந்நிலையில், ஜனவரி 7-ஆம் தேதி வர்ஷினி தங்கியிருந்த அறையில் சடலமாக கிடந்தார். இதுகுறித்து போலீஸார் விசாரணை நடத்தினர். முதற்கட்ட விசாரணையில் அவரது அறை வெளிப்புறமாக தாழிடப்பட்டிருந்தது சந்தேகத்தை ஏற்படுத்தியது. மேலும், வர்ஷினியின் தந்தை வரதராஜன், அவரைப் பார்க்க வந்து சென்றதும், அவரது செல்போன் சுவிட்ச் ஆஃப் செய்யப்பட்டிருந்ததும் போலீஸாருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது.

இதுகுறித்து வர்ஷினியின் தாய் உஷாவுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சேலம் வந்த அவரிடம் போலீஸார் விசாரணை நடத்தியதில் அதிர்ச்சி தகவல்கள் போலீஸாருக்கு தெரியவந்தது. உஷாவுக்கும் வேறொருவருக்கும் நடைபெற்ற திருமணத்தில் வர்ஷினி பிறந்துள்ளார். அவர் பிறந்த சில ஆண்டுகளில் உஷாவின் கணவர் அவரை விட்டு பிறிந்த நிலையில், வரதராஜுவை உஷா இரண்டாவதாக திருமணம் செய்துகொண்டார். நெசவுத் தொழிலாளியான வரதராஜன், உஷாவை திருமணம் செய்துகொண்டபின் வர்ஷினியை தனது குழந்தையாகவே வளர்த்து வந்துள்ளார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *