சொத்துப் பிரச்னை! கணவரின் சடலத்தை தகனம் செய்யவிடாமல் 2 நாள்கள் தகராறு செய்த மனைவி!

Dinamani2f2024 09 102flvbqf23s2fdownload.jpg
Spread the love

சொத்துப் பிரச்னை

தெலங்கானா மாநிலம் பெத்தப்பள்ளி மாவட்டத்தை சேர்ந்த சுனில் (வயது 36) மற்றும் சந்தியா ஆகியோருக்கு 4 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. அவர்களுக்கு ஒரு ஆண் குழந்தை உள்ளார்.

இதனிடையே, கடந்த ஓராண்டாக கருத்து வேறுபாட்டின் காரணமாக இருவரும் பிரிந்து வாழ்ந்து வந்தனர்.

இந்த நிலையில், 3 நாள்களுக்கு முன்னதாக உடல்நலக் குறைவு ஏற்பட்டு சுனில் உயிரிழந்துள்ளார். அவரின் இறுதிச் சடங்கு மாந்தானி பகுதியில் உள்ள கோதாவரி ஆற்றங்கரையில் நடைபெற இருந்தது.

இந்த செய்தியை அறிந்த சந்தியா, பெற்றோருடன் இறுதிச் சடங்கு நடைபெறும் இடத்துக்குச் சென்று, தனது மகனுக்கு சேர வேண்டிய சொத்துகளை பிரித்துக் கொடுக்குமாறு தகராறில் ஈடுபட்டுள்ளார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *