சொந்த தந்தையை சாக்குமூட்டையில் கட்டி கூரியரில் அனுப்ப முயன்ற பெண் | Reels Gone Wrong: Woman Attempts to Send Her Own Father via Courier, Tied Inside a Sack

Spread the love

தமிழ் சினிமாவில் ஒருவர் தனது குடும்ப உறுப்பினர்களை சாக்குமூட்டையில் கட்டி கூரியரில் அனுப்ப முயன்றதை பார்த்திருப்போம். அது ஒரு காமெடி காட்சி. ஆனால் நிஜத்தில் ஒரு பெண் தனது தந்தையை அதேபோன்று கூரியரியில் அனுப்ப முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

ஒரு பெண் தனது கணவர் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் என மொத்தம் 5 பேர் பெங்களூருவில் உள்ள வயலிகாவை என்ற இடத்தில் இருக்கும் கூரியர் அலுவலகத்திற்கு வந்தார். அவர்கள் ஒரு சாக்குமூட்டையை கொண்டு வந்திருந்தனர். அதனை கூரியரில் மங்களூர் அனுப்ப வேண்டும் என்று சொன்னார்கள்.

சாக்குமூட்டையில் மனிதன்

சாக்குமூட்டையில் என்ன இருக்கிறது என்று கூரியர் கம்பெனி ஊழியர்கள் கேட்டபோது எதையும் சொல்லாமல் மழுப்பினர். உடனே கூரியர் கம்பெனி ஊழியர்கள் சாக்குமூட்டையை திறந்தபோது உள்ளே ஒரு வயதான நபர் இருந்தார். அவர் அப்பெண்ணின் தந்தையாகும்.

இதனை பார்த்து கூரியர் கம்பெனி ஊழியர்கள் அதிர்ச்சியடைந்தனர். உள்ளே இருந்த நபர் மூச்சுவிட சிரமப்பட்டுக்கொண்டிருந்தார். அப்படி இருந்தும் அப்பெண்ணும் அவருடன் வந்தவர்களும் அந்த கூரியர் பார்சலை வாங்க வேண்டும் என்று வாக்குவாதம் செய்தனர்.

அதற்கு மனிதர்களை கூரியரில் அனுப்ப முடியாது என்று கூரியர் ஊழியர்கள் தெரிவித்தனர். ஒரு மனிதரை கூரியர் மூலம் அனுப்ப இயலாது என்று ஊழியர்கள் கூறியபோது, ​​அந்த நபர்கள் அடம்பிடித்து, நாங்கள் இவரை வேறொரு மாவட்டத்திற்கு கூரியர் செய்ய விரும்புகிறோம் என்று கூறினர். அதோடு அவர்கள் தங்களது செயலுக்காக மன்னிப்பு கேட்பதற்குப் பதிலாக, ஒரு மனிதர் இருக்கும் பையை கூரியர் செய்யவே இயலாது என்றால், பிறகு எதற்காகவே இந்தத் தொழிலை நடத்துகிறீர்கள் என்று அவர்கள் ஊழியர்களிடம் வாக்குவாதம் செய்தனர்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *