அறிவுப் பகிர்வு, தொழில்முனைவு மற்றும் பெண் ஆளுமைகளைக் கொண்டாடுவதை நோக்கமாகக் கொண்டு செயல்படும் “மேஜிக் 20 தமிழ்’ (Magic 20 Tamil) தளத்தின் சார்பில், பெண் தலைவர்கள் மற்றும் தொழில்முனைவோர்களைக் கொண்டாடும் ‘மேஜிக் பெண்கள்’ (Magic Pengal), நிகழ்ச்சி சென்னையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
பெண் தொழில்முனைவோர், முதலீட்டாளர்கள், வல்லுநர்கள், படைப்பாளர்கள் மற்றும் வருங்கால நிறுவனர்கள் எனப் பலர் கலந்துகொண்டனர்.

நிகழ்ச்சியில் பேசிய தி வெல்த் கம்பெனியின் நிறுவனர் மது லுனாவத், நிதித் துறையில் ஒரு நிறுவனத்தைக் கட்டியெழுப்பிய தனது பயணம் மற்றும் ஆண்கள் ஆதிக்கம் செலுத்தும் இத்துறையில் எதிர்கொண்ட சவால்களைப் பகிர்ந்துகொண்டார்.
அசாமில் பிறந்த அவர், குடும்பத்தில் முதன்முதலாக கல்வி கற்ற பெண்ணாக உருவெடுத்தது தொடங்கி, இன்போசிஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றிய அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டார்.
“எனது 56 வயதில் என் அம்மாவுக்கு வீடு கட்டிக் கொடுத்தேன். பெண்களுக்கு பொருளாதார சுதந்திரம் அவசியம்.