இந்த உத்தரவுக்கு எதிராக திரைப்பட தணிக்கை வாரியம் சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்ததோடு, அம்மனு அன்று மாலையே அவசர வழக்காகவும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. அப்போது ஜனநாயகன் திரைப்படத்தின் தயாரிப்பு நிறுவனமான கே.வி.என் நிறுவனத்திற்கு பல்வேறு கேள்விகளை எழுப்பியதோடு, ஜனநாயகம் திரைப்படத்திற்கு யு/ஏ சான்றிதழ் வழங்கி தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்தார்.
மேலும் மேல்முறையீட்டு மனு மீது நோட்டீஸ் பிறப்பித்ததோடு வழக்கை ஜனவரி 21ம் தேதிக்கு ஒத்தி வைத்தனர். இந்நிலையில் இந்த விவகாரத்தில் தயாரிப்பு நிறுவனம் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. இன்னொரு பக்கம் தங்கள் தரப்பு கருத்துக்களை கேட்காமல் எந்த உத்தரவும் பிறப்பிக்கக் கூடாது என வலியுறுத்தி மத்திய திரைப்பட தணிக்கை வாரியம் உச்ச நீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல் செய்தது. இந்நிலையில் இந்த வழக்கானது உச்ச நீதிமன்றத்தின் இரு நீதிபதிகள் அமர்வான தீபங்கர் தத்தா மற்றும் ஏ ஜி மாசி ஆகியோர் அடங்கிய அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது பட தயாரிப்பு நிறுவனம் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் முகுல் ரோத்தகி, ஏற்கனவே படத்தின் திரைப்படத் தேதியை ஒன்பதாம் தேதி என நாங்கள் அறிவித்தோம் இந்தியா முழுவதும் 5000 திரையரங்குகளில் படத்தை திரையிடவும் ஏற்பாடுகளை செய்து விட்டோம் ஆனால் கடைசி நேரத்தில் திரைப்படத்தில் 10 இடங்களை நீக்கினால் தான் படத்திற்கான தணிக்கை சான்றிதழ் தரப்படும் என தணிக்கை வாரியம் கூறியிருக்கிறது எனவே இதில் உடனடியாக உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என கோரிக்கை வைத்தார்.