ஜப்பானில்.. முன்னாள் சிறைக் கைதியின் கல்லறையில் மன்னிப்புக் கோரிய அதிகாரிகள்! ஏன் தெரியுமா?

Spread the love

இந்நிலையில், ஜப்பானின் காவல் மற்றும் நீதித் துறை அதிகாரிகள் ஐஷிமாவின் கல்லறையில் மலர் தூவி, தலை வணங்கி அதிகாரப்பூர்வமாக மன்னிப்புக் கோரியுள்ளனர்.

இதுகுறித்து, டோக்கியோ காவல் துறையின் உயர் அதிகாரி, எங்களது சட்டவிரோதமான விசாரணை மற்றும் கைதுகளுக்கு நாங்கள் மன்னிப்புக் கோருகிறோம் எனக் கூறியுள்ளார்.

மேலும், டோக்கியோ மாவட்ட துணை அரசு வழக்கறிஞரான ஹிரோஷி இச்சிகாவா, ஐஷிமாவுக்கு பிணை நிராகரிக்கப்பட்டது அந்நியாயம் என ஒப்புக்கொண்டதுடன், அதற்காக தனது வருத்தங்களையும் தெரிவித்துள்ளார்.

முன்னதாக, உபகரணங்களை சட்டவிரோதமான முறையில் ஏற்றுமதி செய்த குற்றச்சாட்டுகளை அவர்களது நிறுவனம் தொடர்ந்து மறுத்து வந்தது.

பின்னர், அந்தக் குற்றச்சாட்டுகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்ட நிலையில், தவறுதலாகக் கைது செய்யப்பட்ட நிர்வாகிகளுக்கு டோக்கியோ அரசு ரூ.9.4 கோடி இழப்பீடு வழங்க அந்நாட்டு நீதிமன்றம் உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க: ஆஸ்திரேலியாவில் இருந்து வெளியேறினார் ஈரான் தூதர்!

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *