இந்நிலையில், ஜம்மு-காஷ்மீரைச் சோ்ந்த ஸஹூா் அகமது பட், குா்ஷைத் அகமது மாலிக் ஆகிய 2 சமூக செயல்பாட்டாளா்கள் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனா்.
அந்த மனுவில், ‘ஜம்மு-காஷ்மீா் கடந்த 5 ஆண்டுகளாக யூனியன் பிரதேசமாக நீடிக்கிறது. பிராந்தியத்தின் வளா்ச்சிக்கு இது பல வகைகளில் தடையாக உள்ளது. இவற்றைக் கருத்தில் கொண்டு ஜம்மு-காஷ்மீருக்கு அடுத்த 2 மாதங்களுக்குள் மீண்டும் மாநில அந்தஸ்து வழங்கப்பட வேண்டும்’ எனக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.