‘ஜல்லிக்கட்டு நடத்த 5 லட்சம் மானியம்; வட்டி இல்லாக் கடன்’- 2-ம் கட்ட வாக்குறுதிகளை அறிவித்த எடப்பாடி| Edappadi Palaniswami has announced the second phase of election promises today

Spread the love

தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கிகொண்டிருக்கிறது. இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், பேரணி, பிரசாரம், பொதுக்கூட்டம், தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தைகள் என அரசியல் களம் அனல் பறக்கிறது.

இது ஒருபுறம் இருக்க தேர்தல் அறிக்கை (வாக்குறுதிகள்) தொடர்பானப் பேச்சுகளையும் அரசியல் கட்சிகள் தொடங்கிவிட்டன.

கடந்த சில வாரங்களுக்கு முன்புதான் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி முதற்கட்டமாக 5 தேர்தல் வாக்குறுதிகளை அறிவித்திருந்தார்.

எடப்பாடி பழனிசாமி

எடப்பாடி பழனிசாமி

குறிப்பாக திமுக ஆட்சியில் மாதந்தோறும் 1000 ரூபாயாக வழங்கப்படும் மகளிர் உதவித்தொகை அதிமுக ஆட்சிக்கு வந்தால் 2000 ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும் என்று அறிவித்திருந்தார். அதுமட்டுமின்றி பெண்களுக்கு மட்டும் அல்லாமல் ஆண்களுக்கும் இலவச பேருந்து வசதி ஏற்படுத்தப்படும் என்று தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் இரண்டாம் கட்டமாக தேர்தல் வாக்குறுதிகளை இன்று எடப்பாடி பழனிசாமி அறிவித்திருக்கிறார்.

*சிறுபான்மையினர் மகளிருக்கு வட்டி இல்லாக் கடன்

* ஜல்லிக்கட்டு நடத்த 5 லட்சம் மானியம்

* மாற்றுதிறனாளிகளின் கூட்டுறவுக் கடன் தள்ளுபடி

* முதியோருக்கான ஓய்வூதியம் ரூ. 2000

* ஆண்டுக்கு மூன்று சிலிண்டர்கள் இலவசம்

* மாணவர்களின் கல்விக்கடன் ரத்து செய்யப்படும்

* ஜல்லிகட்டில் உயிரிழப்போருக்கு ரூ.10 லட்சமும், காயமடைந்தோருக்கு ரூ.2 லட்சமும் வழங்கப்படும்

*கணவனால் கைவிடப்பட்ட பெண்கள், ஆதரவற்ற பெண்களுக்கான மாத உதவித் தொகை ரூ.2000 ஆக உயர்த்தப்படும்

*மாற்றுத் திறனாளிகளின் கூட்டுறவு வங்கிக் கடன்கள் தள்ளுபடி செய்யப்படும்

போன்ற வாக்குறுதிகளை அறிவித்திருக்கிறார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *