இந்த செய்தியில் அடிப்படையில் தாமாக முன்வந்து சென்னை உயர்நீதிமன்றம் வழக்கை விசாரணைக்கு எடுத்தது. இந்த வழக்கின் விசாரணை இன்று நடைபெற்றது.
விசாரணையின்போது ஆஜரான தமிழக அரசுத் தரப்பில், பிணைத் தொகை செலுத்த முடியாமல் 104 பேர் பிணை கிடைத்தும் சிறையில் இருப்பதாக தெரிவித்தனர்.
இதனைத் தொடர்ந்து, நிறைவேற்ற முடியாத நிபந்தனைகள் விதிப்பதால், பிணை வழங்குவதில் எந்த பயனும் இல்லை என்று நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர்.
மேலும், வழக்கின் விசாரணையை 4 வார காலத்துக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.