ஜாமீனை நீட்டிக்க மறுப்பு: தேவநாதன் நீதிமன்றத்தில் சரண் | court Refusal to extend bail for Devanathan

Spread the love

சென்னை: தி மயி​லாப்​பூர் இந்து பெர்​ம னென்ட் ஃபண்ட் நிதி நிறு​வனத்​தில் முதலீடு செய்த 100-க்​கும் மேற்​பட்ட முதலீட்டாளர்களிடம் பல கோடி ரூபாய் மோசடி செய்​த​தாக அந்​நிறு​வனத்​தின் இயக்​குநர் தேவ​நாதன் உள்​ளிட்​டோரை பொருளாதார குற்​றப்​பிரிவு போலீ​ஸார் கைது செய்​தனர்.

இந்த வழக்​கில் ரூ.100 கோடியை நீதி​மன்​றத்​தில் டெபாசிட் செய்ய வேண்​டும், சாட்​சிகளை கலைக்​கக் கூடாது என்ற நிபந்தனைகளுடன் தேவ​நாதனுக்கு கடந்த செப்​.15-ம் தேதி​யன்​று, அக்​.30 வரை ஜாமீன் வழங்கி உயர் நீதி​மன்​றம் உத்தரவிட்டிருந்தது.

ஆனால், உயர் நீதி​மன்​றம் விதித்த நிபந்​தனைப்​படி ரூ.100 கோடியை தேவ​நாதன் டெபாசிட் செய்​ய​வில்லை என்​ப​தால் அவருக்கு வழங்​கப்​பட்ட ஜாமீனை ரத்து செய்​யக்​கோரி முதலீட்​டாளர்​கள் தரப்​பில் முறை​யிடப்​பட்​டது. அதையடுத்து தேவ​நாதனுக்கு வழங்​கப்​பட்ட ஜாமீனை நீட்​டிக்க உயர் நீதி​மன்​றம் மறுத்தது.

எனவே தேவ​நாதன் சென்னை நிதி நிறுவன மோசடி வழக்​கு​களை விசா​ரிக்​கும் சிறப்பு நீதி​மன்​றத்​தில் நீதிபதி முரு​கானந்​தம் முன்​பாக நேற்று சரண் அடைந்​தார். அதையடுத்து அவரை வரும் நவ.24 வரை நீதி​மன்​றக் காவலில் சிறை​யில் அடைக்க நீதிபதி உத்​தர​விட்​டுள்​ளார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *