ஜார்க்கண்ட் மாநில முன்னாள் முதல்வர் சிபு சோரன் மறைவுக்கு முதல்வர், தலைவர்கள் இரங்கல் | political leaders condolences for demise of former Jharkhand CM Shibu Soren

1371957
Spread the love

சென்னை: ஜார்க்​கண்ட் மாநில முன்​னாள் முதல்​வர் சிபு சோரனின் மறைவுக்கு முதல்​வர் மு.க.ஸ்​டா​லின் மற்​றும் பல்​வேறு கட்​சி தலை​வர்​கள் இரங்​கல் தெரி​வித்​துள்​ளனர். ஜார்க்​கண்ட் மாநில முன்​னாள் முதல்​வர் சிபு சோரன் (81) உடல்​நலக்​குறைவு காரண​மாக டெல்​லி​யில் நேற்று கால​மா​னார். அவரது மறைவையொட்டி தலை​வர்​கள் வெளி​யிட்ட இரங்​கல் செய்​தி​களில் கூறி​யிருப்​ப​தாவது:

முதல்​வர் மு.க.ஸ்​டா​லின்: ஜார்க்​கண்ட் மாநிலத்​தின் முன்​னாள் முதல்​வரும், ஜார்க்​கண்ட் முக்தி மோர்ச்சா கட்​சி​யின் நிறு​வனரு​மான சிபு சோரன் மறைந்த செய்​தி​யறிந்து மிக​வும் வேதனையடைந்​தேன். சுரண்​டலுக்கு எதி​ரான இடை​வி​டாத எதிர்ப்பு மற்​றும் சமூக நீதிக்​கான அசைக்க முடி​யாத அர்ப்​பணிப்பு ஆகிய​வற்​றால் அவரது வாழ்க்கை வரையறுக்​கப்​பட்​டது. பழங்​குடி​யின மக்​களின் பல்​லாண்​டு​கால உரிமை கோரலான புதிய மாநிலத்தை தோற்​று​வித்த அரசி​யல் சக்​தி. அவரை இழந்து துயரில் ஆழ்ந்​துள்ள மக்​களுக்கு எனது ஆழ்ந்த இரங்கல்.

பாமக தலை​வர் அன்​புமணி: ஜார்க்​கண்ட் மாநிலத்​தின் தன்​னிகரற்ற தலை​வர்​களில் ஒரு​வ​ரான சிபு சோரன், தனது 18 வயதில் பொது வாழ்க்​கைக்கு வந்து பழங்​குடி​யின மக்​களின் உரிமை​களுக்​காகப் போராடிய​வர். 28 ஆண்​டு​கள் போராட்​டத்​துக்​குப் பிறகு ஜார்க்​கண்ட் என்ற தனி மாநிலம் அமைவதற்கு காரண​மாக இருந்​தவர். சிபு சோரனை இழந்து வாடும் குடும்​பத்​தினருக்கு ஆழ்ந்த இரங்கல்.

தி.க. தலை​வர் கி.வீரமணி: பழங்​குடி​யின மக்​களைத் திரட்​டி, அரசி​யல் சக்​தி​யாக்​கிப் போராடியதுடன், ஜார்க்​கண்ட் தனி மாநில​மாக உரு​வாகக் காரண​மானவர்களுள் முக்​கிய மானவர் சிபு சோரன். மண்​டல் கமிஷன் அறிக்​கையை நடை​முறைப்​படுத்​து​வதற்​கான போராட்​டக் களங்​களில், வடநாட்​டில் நாம் பங்​கேற்ற நிகழ்ச்​சிகளில் பங்​கேற்ற சமூகநீதி உணர்​வாளர். மதவாத சக்​தி​களுக்கு எதி​ராக தன்​னுடைய நிலைப்​பாட்​டில் உறு​தி​யாக இருந்​தவர். இவ்​வாறு அவர்​கள் தெரி​வித்​துள்​ளனர்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *