ஜிம்பாப்வேவுக்கு எதிரான தோல்விக்கு காரணம் என்ன? ஷுப்மன் கில் பதில்!

Dinamani2f2024 072f8b924c25 D6af 4fef 915f 8aa3e53956372fgrlj4fgwsaayaxg.jpg
Spread the love

இந்த நிலையில், ஜிம்பாப்வேவுக்கு எதிரான முதல் டி20 போட்டியில் ஏற்பட்ட தோல்வி குறித்து இந்திய அணியின் கேப்டன் ஷுப்மன் கில் பேசியுள்ளார்.

ஜிம்பாப்வேவுக்கு எதிரான முதல் போட்டியில் ஏற்பட்ட தோல்விக்குப் பிறகு ஷுப்மன் கில் பேசியதாவது: நாங்கள் நன்றாக பந்துவீசினோம். ஆனால், பேட்டிங்கில் எங்களது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை. அனைவரும் சிறிது அவசரமாக விளையாடியது போல தெரிகிறது. பேட்டிங்கில் நேரமெடுத்து சிறப்பாக விளையாடுவது குறித்து பேசினோம். ஆனால், அவ்வாறு நாங்கள் விளையாடவில்லை. ஆட்டத்தின் பாதிக்குள் நாங்கள் 5 விக்கெட்டுகளை இழந்துவிட்டோம். நான் ஆட்டமிழந்த விதம் எனக்கு மிகுந்த ஏமாற்றத்தைக் கொடுத்தது. 116 ரன்கள் என்ற இலக்கை துரத்தும்போது கடைசி வீரர் வரை வெற்றிக்கான வாய்ப்பு இருந்தது. ஆனால், இன்றையப் போட்டியில் ஏதோ தவறு நடந்துவிட்டது என்றார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *